இலங்கையில் அமைச்சரவையின் அனுமதியின்றி நடத்தப்படும் எல்.பி.எல் போட்டி! விளையாட்டுத்துறை அமைச்சர் தகவல்
இலங்கையில் தற்பொழுது நடத்தப்பட்டு வரும் எல்.பி.எல் போட்டித்தொடர் அமைச்சரவையின் அனுமதியின்றி நடத்தப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
துறைசார் அமைச்சிடம் எவ்வித அனுமதியும் பெறவில்லை என விளையாட்டுத்துறை அமைச்சர் ரொசான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
விளையாட்டுச் சட்டத்தின் பிரகாரம் இலங்கையில் நடைபெறும் எந்தவொரு போட்டித் தொடரையும் நடாத்துவதற்கு விளையாட்டுத்துறை அமைச்சரிடம் அனுமதி பெற்றுக்கொள்ளப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.
இரண்டு மாதங்களுக்கு முன்னதாக எல்.பி.எல். போட்டித் தொடரை நடாத்துவதற்கு அனுமதி பெற்றுக்கொள்ளுமாறு தாம் கடிதம் ஊடாக அறிவித்த போதிலும் உரிய பதில் கிடைக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாகவே போட்டித் தொடரின் ஆரம்ப நிகழ்வில் தாம் பங்கேற்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எல்.பி.எல் நிர்வாகமோ அல்லது ஶ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனமே போட்டித் தொடரை நடாத்த அனுமதி கோரவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

குணசேகரன் குறித்து சாமியார் கூறிய உண்மை, அடிக்கச்சென்ற கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

அமெரிக்காவில் தோசையால் புகழ்பெற்ற இலங்கை தமிழர்! கனடா, ஜப்பானிலும் ரசிகர்கள்..யார் அவர்? News Lankasri
