மிகப்பெரிய அந்நிய முதலீடுகளை தக்கவைத்துள்ள இலங்கை

Sri Lanka China Economy of Sri Lanka
By Dharu Jan 16, 2025 10:47 PM GMT
Report

இலங்கை "அதன் மிகப்பெரிய அந்நிய நேரடி முதலீடுகளில் ஒன்றை" பெற்றுள்ளது என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

சீனாவுக்கான அரசு பயணத்தின் போது சினோபெக்குடன் 3.7 பில்லியன் டொலர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு கருத்து தெரிவித்தபோதே அநுர இதனை கூறியுள்ளார்.

இருதரப்பு கலந்துரையாடல்களுக்குப் பிறகு, ஜனாதிபதி திசாநாயக்கவும் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கும் இருதரப்பு உறவுகளில் வளர்ச்சியின் "புதிய சகாப்தத்தை" ஏற்படுத்தவும், பாரம்பரிய நட்பை ஆழப்படுத்தவும், பெல்ட் அண்ட் ரோடு ஒத்துழைப்பை மேம்படுத்தவும் உறுதியளித்ததாக அதிகாரப்பூர்வ அறிக்கைகள் தெரிவித்தன.

மேலும் கருத்து தெரிவித்த அநுர, 

போர் நிறுத்த கொண்டாட்டத்தின் போது காசாவில் இஸ்ரேல் படைகளின் திடீர் நடவடிக்கை

போர் நிறுத்த கொண்டாட்டத்தின் போது காசாவில் இஸ்ரேல் படைகளின் திடீர் நடவடிக்கை

பொருளாதார வளர்ச்சி

"எனது அரசு சீன பயணத்தின் போது, ​​எங்கள் மிகப்பெரிய வெளிநாட்டு நேரடி முதலீடுகளில் ஒன்றான சினோபெக்குடன்  அம்பாந்தோட்டையில் ஒரு மேம்பட்ட எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை உருவாக்க 3.7 பில்லியன் டொலர் ஒப்பந்தத்தைப் பெற்றோம்.

மிகப்பெரிய அந்நிய முதலீடுகளை தக்கவைத்துள்ள இலங்கை | Lanka Has Retained The Largest Foreign Investments

இது ஏற்றுமதியை அதிகரிக்கும், வேலைவாய்ப்புகளை உருவாக்கும் மற்றும் பொருளாதார வளர்ச்சியைத் தூண்டும்.

இந்த முதலீடு அம்பாந்தோட்டை மாவட்டத்தில் "200,000 பீப்பாய்கள் கொள்ளளவு கொண்ட ஒரு அதிநவீன எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஆகும்.

இது 99 ஆண்டு குத்தகைக்கு இந்த சுத்திகரிப்பு நிலையம் திட்டமிடப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.

இந்தியாவிற்கு விஜயம் செய்ததைத் தொடர்ந்து ஜனவரி 14 முதல் 17 வரை - இரண்டாவது வெளிநாட்டு பயணத்தை அநுரகுமார சீனாவுக்கு மேற்கொண்டுள்ளார்.

ரணில் தரப்புடன் பேசுவதற்கு சஜித் தரப்பு இணக்கம்: பேச்சுவார்த்தை குழுவும் நியமிப்பு

ரணில் தரப்புடன் பேசுவதற்கு சஜித் தரப்பு இணக்கம்: பேச்சுவார்த்தை குழுவும் நியமிப்பு

அணிசேரா வெளியுறவுக் கொள்கை

இலங்கையின் நலன்களை முதன்மைப்படுத்தும் அணிசேரா வெளியுறவுக் கொள்கையை பின்பற்றுவதாக உறுதியளித்த தலைவருடன் நெருக்கமாக பணியாற்ற இந்தியாவும் சீனாவும் தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளன.

மிகப்பெரிய அந்நிய முதலீடுகளை தக்கவைத்துள்ள இலங்கை | Lanka Has Retained The Largest Foreign Investments

2024 இல் திசாநாயக்கவும் அவரது தேசிய மக்கள் சக்தியும் ஆட்சியைக் கைப்பற்றிய பின்னர், அரசு நடத்தும் சினோபெக்குடனான இலங்கையின் இந்த ஒப்பந்தம்,சீனாவின் முதலீட்டு உத்தியில் தொடர்ச்சியைக் குறிக்கிறது.

2022 இல் அதன் பேரழிவு தரும் பொருளாதார வீழ்ச்சி மற்றும் இறையாண்மை இயல்புநிலைக்குப் பிறகு கடன்களை விட முதலீடுகளுக்கு இலங்கையின் விருப்பத்தையும் இது பிரதிபலிக்கிறது. 

இது தொடர்பில் கேள்வி எழுப்பியுள்ள இந்திய ஊடகங்கள், “கடந்த மாதம் புதுடில்லிக்கு விஜயம் செய்து, இலங்கையின் பிரதேசத்தை இந்தியாவின் நலனுக்கு எதிராகப் பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்று உறுதியளித்த பின்னர், தனது இரண்டாவது வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை முடித்த திசாநாயக்க, இந்தியாவால் உளவு கப்பல்களாகக் கருதப்படும் சீனாவின் சர்ச்சைக்குரிய ஆராய்ச்சிக் கப்பல்களை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிறுத்த அனுமதிக்குமா என்பது குறித்து இரு தரப்பினரிடமிருந்தும் இதுவரை எந்தத் தகவலும் இல்லை.

முல்லைத்தீவில் விபரீத முடிவெடுத்த குடும்பஸ்தர்

முல்லைத்தீவில் விபரீத முடிவெடுத்த குடும்பஸ்தர்

சீனக் கப்பல்

சீனக் கப்பல்களின் தொடர்ச்சியான வருகைகள் குறித்து இந்தியா இலங்கைக்கு தனது கவலையை தெரிவித்திருந்தது.

மிகப்பெரிய அந்நிய முதலீடுகளை தக்கவைத்துள்ள இலங்கை | Lanka Has Retained The Largest Foreign Investments

வெளிநாட்டு ஆராய்ச்சிக் கப்பல்கள் அதன் துறைமுகங்களுக்கு வருகை தருவதற்கான இலங்கையின் ஒரு வருட தடை கடந்த மாதத்துடன் முடிவடைந்தது.மேலும் அதன் நிலை குறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இலங்கையால் வழங்கவில்லை.

சீன எதிர்ப்பு, பிரிவினைவாத நடவடிக்கைகளுக்கு தனது பிரதேசத்தைப் பயன்படுத்த ஒருபோதும் அனுமதிக்காது என்றும், ஜிசாங் (திபெத்) மற்றும் ஜின்ஜியாங் தொடர்பான பிரச்சினைகளில் சீனாவை உறுதியாக ஆதரிக்கும் என்றும் இலங்கை மீண்டும் கூறியுள்ளது.

மேலும், இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் முக்கிய நலன்கள் மற்றும் முக்கிய கவலைகள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளில் பரஸ்பர ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளமை இதன்மூலம் வெளிப்படுகிறது” என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆலங்குளாய், Saint Margrethen, Switzerland

31 Oct, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

இணுவில், நவாலி தெற்கு, Scarborough, Canada

31 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Nov, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
மரண அறிவித்தல்

Pussellawa, கொழும்பு, ஜேர்மனி, Germany, Scarborough, Canada

31 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Roermond, Netherlands

21 Oct, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

14 Nov, 2024
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

29 Oct, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, Scarborough, Canada

02 Nov, 2023
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
மரண அறிவித்தல்

மீசாலை, இலங்கை, London, United Kingdom, Scarborough, Canada

30 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், வவுனியா, Paris, France

13 Nov, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அச்சுவேலி

12 Nov, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 4ம் வட்டாரம்

12 Nov, 2024
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, சவுதி அரேபியா, Saudi Arabia, சுவீடன், Sweden, London, United Kingdom, Brampton, Canada

01 Nov, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, மானிப்பாய், Toronto, Canada

31 Oct, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom, Toronto, Canada

30 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

02 Nov, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US