தமிழ் மக்களின் நிலங்களை ஆக்கிரமிக்கும் வனவளத் திணைக்களம் : ரவிகரன் எம்.பி

Anura Kumara Dissanayaka Sri Lanka Government Of Sri Lanka Northern Province of Sri Lanka Tamil
By Keethan Dec 28, 2024 03:04 PM GMT
Report

கடந்த 2009ஆம் இற்கு முன்னர் தமிழீழ விடுதலைப்புலிகளால் பாதுகாக்கப்பட்ட தமிழ் மக்களின் பெருமளவான விவசாய மற்றும், குடியிருப்பு நிலங்களை தற்போது வனவளத் திணைக்களம் அபகரித்துள்ளதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் (T. Raviharan) சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறு வனவளத் திணைக்களத்தால் அடாவடித்தனமாக அபகரிக்கப்பட்டுள்ள காணிகள் உடனடியாக விடுவிக்கப்படவேண்டும் எனவும் அவர் இதன்போது வலியுறுத்தியுள்ளார்.

வவுனியா (Vavuniya) வடக்கு பிரதேச செயலகப் பகுதிகளில் வனவளத் திணைக்களத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின் காணி விடுவிப்புத் தொடர்பில் பேசும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை அதிகரிப்பு

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை அதிகரிப்பு

எல்லைக் கல்லிடும் பணி

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

வன்னிப் பகுதி மக்கள் கடந்த காலங்களில் இடம்பெயர்வைச் சந்தித்து மீள்குடியேறியது அனைவரும் அறிந்ததே. சில இடங்களில் குறிப்பிட்டளவு காலங்களுக்குள்ளும், சில பகுதிகளில் நீண்டகாலங்களுக்குப் பின்னரும் மக்கள் மீளக்குடியமர்த்தப்பட்டனர்.

தமிழ் மக்களின் நிலங்களை ஆக்கிரமிக்கும் வனவளத் திணைக்களம் : ரவிகரன் எம்.பி | Lands Have Been Seized By The Forest Department

இந்தநிலையில் மக்கள் இடப்பெயர்விற்கு முன்பதாக பயிர்செய்கையில் ஈடுபட்ட காணிகள் தற்போது பற்றைக்காடுகளாகக் காட்சியளிக்கின்றன.

தற்போது இவ்வாறு பற்றைக் காடுகளாகக் காட்சியளிக்கும் எமது மக்களுக்குரிய காணிகளுக்கு, எவ்வித முன்றிவிப்புக்களுமின்றி வனவளத் திணைக்களத்தினர் தற்போது எல்லைக்கல்லிடுகின்ற அடாவடித்தனமான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்தந்த மாவட்டசெயலருக்கோ, பிரதேசசெயலருக்கோ, கிராம அலுவலருக்கோ, காணிகளுக்குரிய மக்களுக்கோ அறிவிக்காமலேயே இவ்வாறு எல்லைக்கல்லிடும் பணிகளில் வனவளத் திணைக்களத்தினர் ஈடுபடுகின்றனர்.

வீடொன்றுக்குள் புகுந்த மர்ம கும்பல் வெறியாட்டம் : ஒருவர் மரணம் - 2 பேர் படுகாயம்

வீடொன்றுக்குள் புகுந்த மர்ம கும்பல் வெறியாட்டம் : ஒருவர் மரணம் - 2 பேர் படுகாயம்

அடாவடித்தனமான ஆக்கிரமிப்பு

பூர்வீகமாக பயிர்ச்செய்கையில் ஈடுபட்டு திறம்பட வாழ்ந்து வந்த எமது மக்களின் பயிர்ச்செய்கை நிலங்கள் இதில் அதிகமாக வனவளத் திணைக்களத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. வனவளத் திணைக்களத்தின் அடாவடித்தனமான ஆக்கிரமிப்புத் தொடர்பில் ஒரு உதாரணத்தைச் சுட்டிக்காட்டலாமென நினைக்கின்றேன்.

தமிழ் மக்களின் நிலங்களை ஆக்கிரமிக்கும் வனவளத் திணைக்களம் : ரவிகரன் எம்.பி | Lands Have Been Seized By The Forest Department

முல்லைத்தீவு மாவட்டத்தில் 2009 ஆம் ஆண்டிற்கு முன்னர் வனவளத் திணைக்களத்திடம் 2,22006ஏக்கர், 2009ஆம் ஆண்டிற்குப் பின்னர் அடாவடித்தனமாக எமது மக்களின் காணிகளுக்கும் எல்லைக்கல்லிட்டு பல்லாயிரக்கணக்கான ஏக்கர் காணிகள் வனவளத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டிலுள்ளது.

அந்தவகையில் 2009ஆம் ஆண்டுக்கு முன்னர் எமது மக்களின் காணிகளை விடுதலைப் புலிகள் பாதுகாத்தனர். அவ்வாறு எமது மக்களின் காணிகளை விடுதலைப்புலிகள் பாதுகாத்ததால்தான் எமது மக்கள் நிறைவாகவும், சிறப்பாகவும் வாழ்ந்தார்கள். இவ்வாறு அபகரிக்கப்பட்ட மக்களின் காணிகள் விடுவிக்கப்படவேண்டுமென நாம் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றோம்.

புதிதாகப் பொறுப்பேற்றுள்ள அரசாங்கத்திடமும் இவ்வாறு அபகரிக்கப்பட்டுள்ள எமது மக்களின் காணிவிடுவிப்புத் தொடர்பில் தொடர்ந்தும் வலியுறுத்துவோம்.

தமிழரசுக் கட்சிக்கு எதிரான நகர்வுகளின் பின்னணியில் சுமந்திரன்! அம்பலமான உண்மைகள்

தமிழரசுக் கட்சிக்கு எதிரான நகர்வுகளின் பின்னணியில் சுமந்திரன்! அம்பலமான உண்மைகள்

தீர்வு காண நடவடிக்கை

நாட்டிற்கு காட்டுவளம் தேவைதான். அதற்காக நாட்டுக்கான ஒட்டுமொத்த காடையும் வன்னிக்குள் இருந்து உருவாக்கவேண்டுமென நினைத்தால் அது முற்றிலும் தவறான நிலைப்பாடாகும்.

தமிழ் மக்களின் நிலங்களை ஆக்கிரமிக்கும் வனவளத் திணைக்களம் : ரவிகரன் எம்.பி | Lands Have Been Seized By The Forest Department

வன்னியில் மக்களிடம் இருந்த காணிகள் உடனடியாக விடுவிக்கப்படவேண்டும்.அவ்வாறு விடுவித்தாலே எமது மக்களால் தமது வாழ்வாதாரத்தைக்கொண்டு செல்ல முடியும். வன்னி மக்கள் சிறந்த உழைப்பாளர்கள். அவர்கள் உழைத்து வாழ்ந்த நிலங்களே இவ்வாறு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

எனவே அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுத்தலைவர் பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்கவும் வனவளத் திணைக்களத்தின் இந்த அடாவடித்தனமான செயற்பாடுதொடர்பில் கவனமெடுக்கவேண்டும்.

ஜனாதிபதி, பிரதமர், வனவளத் திணைக்களத்தோடு தொடர்புடையவர்களுடனும் நாம் இணைந்து பேசி இந்த பிரச்சினைக்குத் தீர்வுகாண நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.

இராணுவம் காடுகளில் முகாம் அமைக்கலாம்: மேய்ச்சல் தரைக்கு அனுமதி இல்லை - மக்கள் விசனம்

இராணுவம் காடுகளில் முகாம் அமைக்கலாம்: மேய்ச்சல் தரைக்கு அனுமதி இல்லை - மக்கள் விசனம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US