யாழ்ப்பாணம் - வலிகாமம் வடக்கில் பொதுமக்களிடம் கையளிக்கப்பட்ட காணிகள்
யாழ்ப்பாணம் - வலிகாமம் வடக்கில் அண்மையில் விடுவிக்கப்பட்ட காணிகள், தெல்லிப்பழை பிரதேச செயலாளர் மற்றும் இராணுவத்தினரால் பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
ஜே - 235 காங்கேசன்துறை வடக்கு கிராம சேவையாளர் பிரிவில் 20.32 ஏக்கர் காணி 52
பேருக்கும், ஜே - 240 தென்மயிலை கிராம சேவையாளர் பிரிவில் 25.02 ஏக்கர் காணி
41 பேருக்கும் கையளிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் உயர் பாதுகாப்பு வலயமாக பாதுகாப்பு தரப்பினரது கட்டுப்பாட்டில் இருந்த பொதுமக்களின் ஒரு தொகுதி காணி நிலங்கள் விடுவிக்கப்பட்டதற்கான ஆவண பத்திரங்கள் கையளிக்கும் நிகழ்வு அண்மையில் யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்றுள்ளது.
காணிகளுக்கு பாதுகாப்பு
அதற்கமைய, ஜே -241 கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட வறுத்தலைவிளான் பகுதி எதிர்வரும் 20 ஆம் திகதிக்கு பின்னர் விடுவிக்கப்படுமென தெல்லிப்பழை பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளார்.

காணிகள் விடுவிக்கப்பட்ட நிலையில், பழைய வீடுகளின் கதவு, நிலை, உள்ளிட்ட பொருட்களை திருடிச் செல்லும் வாய்ப்பு காணப்படுவதால் காணிகளுக்கு உரிய பாதுகாப்பை மேற்கொள்ளுமாறு காணிகளை பார்வையிட்ட காணி உரிமையாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.





எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் சக்தியை எப்படி தூக்கினேன், காட்சியை எப்படி எடுத்தார்கள்... ஜனனி ஓபன் டாக் Cineulagam
கர்நாடக வனப்பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட தங்கம், லித்தியம் - சுரங்க அனுமதியில் சிக்கல் News Lankasri
இந்த மூன்று பொருட்களையும் தயாராக வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானிய வானிலை ஆராய்ச்சி மையம் வலியுறுத்தல் News Lankasri
இடத்தை கண்டுபிடித்த போலீஸ்.. பதறிய குணசேகரன் செய்த விஷயம்! எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய ப்ரோமோ Cineulagam