வவுனியா - ஓமந்தையில் காணியற்ற 219 அரச ஊழியர்களுக்கு காணிகள்: வெளியான பெயர்ப்பட்டியல்
வவுனியா - ஓமந்தையில் பணியாற்றும் காணியற்ற 219 அரச ஊழியர்களுக்கு நேர்முக தேர்வின் மூலம் காணிகள் வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாக வவுனியா பிரதேச செயலாளர் நா.கமலதாசன் தெரிவித்துள்ளார்.
காணியற்ற அரச ஊழியர்கள்
ஊடகங்களுக்கு இன்று (04.03.2023) கருத்து தெரிவிக்கையில் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், இதன்போது குறித்த 219 அரச ஊழியர்களின் பெயர்ப்பட்டியல் வெளியாகியுள்ளது.
தெரிவு செய்யப்பட்ட அரச ஊழியர்களின் பெயர் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளதுடன், இவர்களுள் அரச காணியினை பெறுவதற்கு தகுதியற்றவர்கள் தெரிவு செய்யப்பட்டிருப்பின் அவர்கள் தொடர்பில் எதிர்வரும் 24ஆம் திகதிக்குள் பிரதேச செயலகத்திற்கு வருகை மேற்கொண்டு அறிவிக்கவும்.
அல்லது பிரதேச செயலாளர், பிரதேச செயலகம், வவுனியா எனும் முகவரிக்கு தபால் மூலம் தெரியப்படுத்த முடியும்.
பயனாளிகள் தொடர்பான தகவல்
மேலும் 24ஆம் திகதிக்கு பின்னர் கிடைக்கப்பெறும் எவ்வித
முறைப்பாடுகளும் ஏற்றுக்கொள்ளப்படாது என்பதுடன் தெரிவு செய்யப்பட்ட
பயனாளிகள் தொடர்பில் முன்னரே தகவலை வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.















