பல தடவைகள் எடுத்துரைத்தும் வெற்றிடங்கள் நிரப்பப்படவில்லை என குற்றச்சாட்டு
முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் நிலவும் விசேட வைத்திய நிபுணர் பற்றாக்குறை தொடர்பில் பல தடவைகள் எடுத்துரைத்தும் இதுவரை வெற்றிடங்கள் நிரப்பப்படவில்லை என முல்லைத்தீவு மாவட்ட அரச வைத்திய அதிகாரிகள் சங்க தலைவர் க.வசுதேவா (K. Vasudeva) தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பு ஒன்றில் மாவட்ட மருத்துவமனை எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்தார்.
இந்த சந்தர்ப்பத்திலேயே அவர் குறித்த விடயத்தை கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,
முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு கடந்த இரண்டு மாதங்களாக ஒரு சத்திரசிகிச்சை நிபுணர்
கூட கடமையாற்றவில்லை. இரண்டு சத்திரசிகிச்சை நிபுணர்கள் கடமையில் இருக்க வேண்டும்.
ஆனால் இதுவரை எவரும் இல்லை. மாவட்ட மருத்துவமனையினை நாடிவரும் நோயாளர்கள் கிளிநொச்சி, யாழ்ப்பாணம், வவுனியா மருத்துவமனைகளுக்கே மாற்றம் செய்யப்படுகின்ற நிலை ஏற்பட்டுள்ளது.
சத்திரசிகிச்சை நிபுணர்கள் இல்லாத நிலையில் வேறு மருத்துவமனைகளுக்கு மாற்றம் செய்யும் போது ஏற்படும் காலதாமதங்களால் எதிர்வரும் காலங்களில் நோயாளிகள் இறக்க நேரிடலாம்.
காயங்களுக்கு சிகிச்சை அளிக்கும் விசேட கதிரியக்க நிபுணர்கள் இருவர் கடமையில் இருக்க வேண்டும். ஆனால் ஆறு மாதங்களாக ஒரு வைத்திய நிபுணரும், ஒரு விசேட கதிரியக்க வைத்திய நிபுணரும்கூட கடமையில் இல்லை. இவர்கள் இருவருமே காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் முக்கியமானவர்கள்.
எனவே முல்லைத்தீவு மாவட்டத்தில் காயமடைந்தவர்கள் உள்ளிட்ட ஏனைய உடனடி சிகிச்சை பெற வேண்டியவர்களுக்கு சிகிச்சை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மாவட்ட மருத்துவமனையில் விசேட குருதி நோயியல் வைத்திய நிபுணர், முறிவு சத்திரசிகிச்சை நிபுணர், மனநல மருத்துவ நிபுணர் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு இதுவரை நியமிக்கப்படவில்லை.
இவ்வாறு பல வைத்தியர் பற்றாக்குறையுடன் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை இயங்கி வருகின்றது. இதனால் முல்லைத்தீவு மாவட்ட மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றார்கள்.
எனவே மாவட்ட மருத்துவமனையில் நிலவும் விசேட வைத்தியர்களின் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்யுமாறு பல்வேறு தடவைகள் கோரிக்கைக்கள் முன்வைத்துள்ள போதும் அவை நிவர்த்தி செய்யப்படவில்லை.
இவற்றை நிவர்த்தி செய்யாத பட்சத்தில் மாவட்டத்தில் வாழும் மக்களின் நலன் கருதியும் நோயாளர்கள் நலன் கருதியும் தொழிற்சங்க நடவடிக்கைக்கு செல்ல நேரிடும் எனவும் அறிவித்துள்ளார்.

சீனா, பாகிஸ்தானுக்கு பெரும் பதற்றம்.... ரூ 2,000 கோடியில் ட்ரோன் உற்பத்தியை மேம்படுத்தும் இந்தியா News Lankasri

WHO அமைப்பின் நடுங்கவைக்கும் திட்டம்... சீனா, ரஷ்யாவால் மதிப்பிழக்கும் டொலர்: வாழும் நாஸ்ட்ராடாமஸ் கணிப்பு News Lankasri

முட்டாள் தனமாக எப்போதும் குறைகூறும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

இந்த தேதியில் பிறந்தவங்க 30 வயசுக்குள்ள கோடீஸ்வரர் ஆவார்களாம்.. உங்களுக்கும் யோகம் இருக்கா? Manithan
