அமெரிக்காவில் கோவிட்டை பரப்பும் சட்டவிரோத எலிகள் ஆய்வுகூடம்
எலிகள் மூலமாக கோவிட்டை பரப்பும் எலிகளை உருவாக்கும் ஆய்வுகூடம் ஒன்று அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
முதன் முதலில் ஆய்வகங்கள் மூலமாக கொரோனாவை உலகெங்கும் பரப்பியது என்று சீனா மீது அமேரிக்கா குற்றம் சாட்டி வந்த நிலையில் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் குறித்த ஆய்வகம் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின், கலிபோர்னியாவில் இயங்கி வந்த ஆய்வகத்தில் கோவிட், HIV, மலேரியா, மற்றும் பல கொடிய நோய்களை உருவாக்கி வைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த சட்டவிரோத ஆய்வகத்தில் ஆயிரம் எலிகள் கூண்டில் அடைக்கப்பட்டும் அவற்றில் ஏற்கனவே 200 எலிகள் இறந்துள்ள நிலையிலும் உயரிய தொழில்நுட்பத்தின் மூலமாக உருவாக்கபட்டுள்ள இந்த எலிகள் கொரோனாவை பரப்ப உருவாக்கப்பட்டுள்ளது என்றும் தெரிய வந்துள்ளது.
வலுக்கும் சந்தேகங்கள்
ஆனால் அங்கு பணியாற்றியவர்களோ தாங்கள் கோவிட் மற்றும் கருத்தரிப்பு பரிசோதனை கருவிகளை உருவாக்குவதாக தெரிவித்துள்ளார்கள்.
அமெரிக்காவின் நுவேடா நகரில் இயங்கும் Nevada Forestage Bio Tech என்ற பெயரில் இந்த ஆய்வகம் இயங்கியுள்ளது.ஆனால் சகல முகவர்களும் சீனாவில் உள்ள முகவரிதான் கொடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் இந்த ஆய்வகம் இயங்கி வந்துள்ளதாக நீதி மன்றில் அதிகாரிகள் தகவல் கொடுத்துள்ளார்கள்.
இந்நிலையில் மேற்குறித்த ஆய்வகத்தில் இருந்து ஒவ்வொன்றாக கருவிகள் அகற்றப்பட்டு வருவதாகவும் நீதி மன்றில் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வகம் பற்றிய பின்னணியில் இருப்பது யார் என்பது பற்றிய விசாரணையில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

வெளிநாட்டு மாணவர்களுக்கு உணவு கிடையாது: உணவு வங்கிகளின் முடிவால் தவிக்கும் சர்வதேச மாணவர்கள் News Lankasri
