குருநாகலில் முஸ்லிம் மக்களால் ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பு
குருநாகல் (Kurunagala) முஸ்லிம் மக்களினால் காசாவில் நடைபெற்று வரும் போரினை நிறுத்தி சுதந்திர பாலஸ்தீனத்தை வழங்க கோரி ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டமானது நேற்று (14.06.2024) குருநாகல் பெரிய ஜும்ஆப் பள்ளிவாசல் முன்னால் ஜும்ஆ தொழுகை முடிந்துக் கொண்ட பின்னர் நகர சிவில் சமூக அமைப்புகளால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கோரிக்கைகள்
இனப்படுகொலையை நிறுத்தி சுதந்திர பாலஸ்தீனத்தை வழங்கக் கோரி எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தங்கள் கோரிக்கைகளை எழுதிய அட்டைகளை தாங்கியவாறும் கோசங்களை எழுப்பியவாறும் எதிர்ப்பினை வெளியிட்டனர்.

இதன்போது குருநாகல் முன்னாள் மாநகர சபை உறுப்பினர் மொஹினுதீன் அஸார்தீன், சமுகப்பணியாளர் நஸார் ஹாஜியார் உள்ளிட்ட பெரும் எண்ணிக்கையான மக்கள் கலந்து கொண்டனர்.

இஸ்ரேலின் தொடர்ச்சியான போர் முன்னெடுப்புக்களால் காசாவில் உள்ள பொது மக்கள் துயரங்களை அனுபவித்துக்கொண்டு வருகின்றனர்.
அவற்றைத் தடுத்து அவர்களுக்கான தீர்வாக சுதந்திர பாலஸ்தீனத்தை வழங்க வேண்டும் எனவும் மக்கள் வலியுறுத்தியிருந்தனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




இலங்கையை உலுக்கிய ஈஸ்டர் தாக்குதல்களுக்கு முன்பாக கிடைக்கப்பெற்ற எச்சரிக்கை! பகிரப்பட்டுள்ள வட்ஸ்அப் ஆதாரங்கள்
போதைப் பொருட்களை கடத்தி வந்த 22 தேரர்கள்! சரணடைந்த தொழிலதிபர் - சம்மந்தப்பட்டுள்ள பிரித்தானிய நாட்டவர்
வங்கிக்கணக்குகளை பயன்படுத்துவோர் கவனமாக இருக்குமாறு அவசர அறிவுறுத்தல்..! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
போரில் வெடிக்காத குண்டுகள் அகற்றும் ஈரானிய வீரர்கள்: எதிர்பாராத வெடிப்பில் 14 பேர் உயிரிழப்பு News Lankasri
பிரித்தானியாவில் அரிய உயிரியல் நிகழ்வு: இரண்டு தந்தைக்கு பிறந்த இரட்டையர்கள்: எப்படி சாத்தியம்? News Lankasri
சிந்தாமணியின் சூழ்ச்சி.. சொந்த வீட்டை விட்டு வெளியேறும் அண்ணாமலை குடும்பம்.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ Cineulagam