குளியாப்பிட்டிய இளைஞனின் கொலைக்கான காரணம் வெளியானது
குளியாப்பிட்டிய பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் கடத்திச்செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டமைக்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது.
குளியாப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடைய சுசித் ஜெயவம்ச என்ற இளைஞன், 17 வயது யுவதியை காதலித்து அவரை கர்ப்பமாக்கி திருமணம் செய்துக்கொள்ள மறுத்தமையே கொலைக்கான காரணம் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
இவ்வாறு கொலை செய்யப்பட்ட இளைஞன் சிங்கிதியின் (பிரதான சந்தேகநபரின் ) மகளுடன் காதல் உறவில் ஈடுபட்டு வந்த நிலையில், வேறு ஒரு யுவதியுடனும் காதல் உறவில் ஈடுபட்டு வந்ததாகவும், அந்த யுவதியும் தற்போது கர்ப்பமாக இருப்பதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

விசாரணையில் வெளியான தகவல்
சம்பவம் குறித்து கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது, குறித்த இளைஞரை வீட்டில் வைத்து கொலை செய்து பின்னர் சடலத்தை வாகனத்தின் பின் இருக்கையில் அமர வைத்து மாதம்பே பன்னிரெண்டாம் காட்டுப்பகுதிக்குள் கொண்டு சென்றுள்ளமையும் தெரியவந்துள்ளது.

தனது மகளை காதலித்து ஏமாற்றிய காரணத்தினால் இந்த கொலை இடம்பெற்றதாகவும் சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவத்தில் உயிரிழந்த இளைஞர் முன்பு திருமணமாகி பின்னர் சட்டப்பூர்வமாக மனைவியிடமிருந்து பிரிந்துள்ளமையும் தெரியவந்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 12 மணி நேரம் முன்
ஹார்முஸ் முற்றுகையைக் கைவிடுங்கள்... ஈரானின் அதிரடி நகர்வால் ட்ரம்பிடம் கெஞ்சும் சவுதி அரேபியா News Lankasri
முதல் நாளிலேயே தடுமாறிய ட்ரம்பின் ஹார்முஸ் முற்றுகை... அதிரடியாகக் கடந்த ஈரான் கப்பல்கள் News Lankasri
6 மாதம் தள்ளிப்போன விவாகரத்து வழக்கு.. நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
ஈரானில் இருந்து யுரேனியம் மீட்டு எடுக்கப்படும்: புதிய ஒப்பந்தம் குறித்து டிரம்ப் அதிரடி News Lankasri
கங்கையில் 12 மணி நேரம் மிதந்த சிறுவன்! உயிர் பிரிவதை வேடிக்கை பார்த்த பெற்றோர்... நடந்தது என்ன? Manithan