குளியாப்பிட்டிய இளைஞர் கடத்தல் விவகாரம்: பிரதான சந்தேகநபருக்கு பிணை
குளியாப்பிட்டிய பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் கடத்திச்செல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபரை பிணைகளில் விடுவிக்க குளியாப்பிட்டிய நீதவான் ரந்திக லக்மால் ஜயலத் உத்தரவிட்டுள்ளார்.
குளியாப்பிட்டிய - வெரலுகம பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய இளைஞரொருவரே இவ்வாறு கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.
இவர் கடந்த 22 ஆம் திகதி தனது காதலியைச் சந்திப்பதற்காக காதலியின் வீட்டிற்குச் சென்றிருந்த போதே இவ்வாறு காணாமல்போயுள்ளார்.

பிரதான சந்தேகநபருக்கு பிணை
இளைஞர் காணாமல்போன சம்பவத்தின் பிரதான சந்தேகநபரான சிகிதி என்ற சுஜித் பெர்னாண்டோவை 5 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு பிணைகளில் விடுவிக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

சந்தேகநபரை அவரது சட்டத்தரணிகள் ஊடாக நீதிமன்றத்தில் சமர்ப்பித்ததன் பின்னர், பிணை வழங்கப்பட்டுள்ளது.
சந்தேகநபரை நாடளாவிய ரீதியில் தேடுவதில் அரசாங்க அதிகாரிகள் நேரத்தையும் உழைப்பையும் செலவிட்டதாகவும், அவர் சட்டத்தை மதிக்கும் நபராக இருந்தால், அவர் பொலிஸார் முன் வந்திருக்க முடியும் என்றும் பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
முதலமைச்சர் மகனை திருமணம் செய்துகொண்ட நடிகை.. 11 நாட்களில் இறந்த கணவர்! இவர் வாழ்க்கையில் இவ்வளவு சோகமா Cineulagam
கருப்பு திரைப்படத்தின் தமிழ்நாடு ஷேர் மற்றும் லாபம் மட்டும் எவ்வளவு தெரியுமா.. இதோ விவரம் Cineulagam