அடிமை அரசியலை நிராகரித்த மலையக மக்கள்: கலைச்செல்வி பெருமிதம்
சலுகை அரசியல், அடிமை அரசியல் என்பவற்றை நிராகரித்து கொள்கை ரீதியிலான மாற்றத்தை மலையக மக்கள் ஏற்படுத்தியுள்ளனர் என தேசிய மக்கள் சக்தியின் சார்பில் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள கிருஷ்ணன் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் மலையக மக்கள் எதிர்பார்க்கும் மாற்றத்தை நிச்சயம் நாம் ஏற்படுத்துவோம் எனவும் அவர் கூறியள்ளார்.
ஹட்டனில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
நுவரெலியா மாவட்ட வெற்றி
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“தேசிய மக்கள் சக்திக்கு மலையகத்தில் குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தில் கிடைக்கப்பெற்றுள்ள வெற்றி மகிழ்ச்சியளிக்கின்றது.
இது மூவின மக்களுக்கும் கிடைக்கப்பெற்றுள்ள வெற்றியாகும். இந்த வெற்றியை நாம் வரவேற்கின்றோம்.
பாரம்பரிய இரு கட்சிகள்
மாற்றத்துக்காக வாக்களித்த அனைத்து மக்களுக்கும் என் சார்பிலும், கட்சி சார்பிலும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
நுவரெலியா மாவட்டமானது தேர்தல் காலத்தில் பாரம்பரிய இரு கட்சிகளுக்கு வாக்களிக்கப்படும் மாவட்டமாக பயன்படுத்தப்பட்டுவந்தது.
இந்த நடைமுறை இம்முறை தோல்வி கண்டுள்ளது.” என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

காணி நிலம் வேண்டும் பராசக்தி 2 நாட்கள் முன்

விவாகரத்தில் முடிந்த முதல் திருமணம், இறந்த 2வது கணவர்.. பூவே உனக்காக பட நடிகையின் சோக வாழ்க்கை Cineulagam

Optical illusion: உங்கள் கண்களுக்கு உயிர் உள்ளது எனில் இதில் இருக்கும் நேரான “28” எங்கே உள்ளது? Manithan

எடை குறைக்க ஜிம் உடற்பயிற்சிகள் மட்டும் போதாது..நீதா அம்பானியின் உடற்பயிற்சி நிபுணர் விளக்கம் Manithan
