கொழும்பு பொலிஸ் நிலையமொன்றில் துப்பாக்கி மாயம்: விசாரணை தீவிரம்
கொழும்பு - கொட்டாஞ்சேனை பொலிஸாரின் கைதுப்பாக்கி ஒன்றும் அதன் தோட்டாக்களும் காணாமல் போயுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்புப் பெட்டியிலிருந்த துப்பாக்கிகளை எண்ணும் போது, கீழ்நிலை சேவை கடமைகளுக்கான பொறுப்பதிகாரி, உயர் அதிகாரிகளுக்கு இது தொடர்பில் அறிவித்துள்ளதாக தெரிவிக்ப்படுகிறது.
விசேட பொலிஸ் குழு விசாரணை
இந்நிலையில், காணாமல் போன குறித்த துப்பாக்கி, அதிகாரி ஒருவரால் எடுக்கப்பட்டதாக உரிய புத்தகங்களில் பதிவு எதுவும் இல்லை என இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதனை கண்டறியும் முகமாக மேல்மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் பணிப்புரைக்கமைய நேற்று (27.09.2023) கொட்டாஞ்சேனை பொலிஸாருக்கு விசேட பொலிஸ் குழுவொன்று விஜயம் செய்து விசேட விசாரணைகளை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.
குணசேகரன் அடுத்த திட்டம், மதிவதனியை பார்க்க வந்த ராணா... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
நெருக்கடியில் உதவாத ஐரோப்பிய நாடுகள்... உக்ரைன் தொடர்பில் அதிர்ச்சி முடிவெடுத்த ட்ரம்ப் News Lankasri
உடம்பு முடியாமல் இருப்பவரை பார்த்து கிண்டல் செய்த பாண்டியன், கோபத்தில் கோமதி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam