கறுப்பு சந்தை விலையில் சமையல் எரிவாயு விநியோகம் : வெடித்தது மக்கள் போராட்டம் (Video)
கொட்டகலை நகரில் கூடுதல் விலைக்கு சமையல் எரிவாயு விற்பனை செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தமக்கு பட்டியல் விலையில் சமையல் எரிவாயுவை வழங்குமாறு வலியுறுத்தியும் நுகர்வோர் இன்று (24) சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நாடாளாவிய ரீதியில் சமையல் எரிவாயுவுக்கு கடும் தட்டுப்பாடு நிலவிவரும் நிலையில், கொட்டகலை பகுதியிலும் தட்டுப்பாடு நிலைமை நீடித்தது. இந்நிலையில் சமையல் எரிவாயுவை கொள்வனவு செய்வதற்காக இன்றும் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்திருந்துள்ளனர்.
இந்நிலையில் கொட்டகலை நகரில் இரு வர்த்தக நிலையங்கள் ஊடாக சமையல் எரிவாயு விநியோகிக்கப்படுகின்றது. அதில் ஒரு கடையில் லிட்ரோ எரிவாயு ஒன்று சுமார் 4 ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
“லாப் எரிவாயுவின் விலை அதிகரித்துள்ளபோதிலும் லிட்ரோ எரிவாயுவின் விலை இன்னும் அதிகரிக்கப்படவில்லை. எனவே, 75 வீத விலை அதிகரிப்புடன் எதற்காக லிட்ரோ எரிவாயு விற்பனை செய்யப்பட வேண்டும்” என நுகர்வோர் இதன்போது கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதன்போது அத்தியாவசிய தேவையுள்ள சிலர் அதிக விலைக்கு சமையல் எரிவாயுவை பெற்றுச்சென்றுள்ளனர். எனினும், ஏனையோர் முறையற்ற விலை அதிகரிப்புக்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டு, தமக்கு நியாயம் வேண்டும் என வாதாடியுள்ளனர்.
அத்துடன், மற்றைய வர்த்தக நிலையத்தில், முன்கூட்டியே பதிவு செய்யப்பட்டவர்களுக்குதான் சமையல் எரிவாயு விநியோகிக்கப்பட்டுள்ளது. அதாவது தமக்கு தேவையானவர்களுக்கு மட்டும் அதிக விலைக்கு வழங்கப்படுவதாக நுகர்வோர் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இதனால் கொதிப்படைந்த நுகர்வோர், பிரதான வீதியில் இறங்கி போராடியுள்ளனர். தமக்கு நீதி வேண்டும், நியாயமான விலையில் சமையல் எரிவாயு வழங்கப்பட வேண்டும் என இதன்போது வலியுறுத்தியுள்ளனர்.
இதனையடுத்து சம்பவ இடத்துக்கு பொலிஸார் விரைந்து மூடப்பட்ட வர்த்தக நிலையத்தை திறப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வர்த்தகரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அத்துடன், பட்டியல் விலைக்கே சமையல் எரிவாயுவை விநியோகிக்குமாறு பணிப்புரை விடுத்ததுடன், அதிக விலையை பெற்றவர்களுக்கு, மேலதிக கொடுப்பனவை மீள வழங்குமாறும் வலியுறுத்தியுள்ளனர்.
இதன் போது ஹட்டன் - நுவரெலியா வீதி ஊடான போக்குவரத்து சுமார் ஒரு மணிநேரம் ஸ்தம்பிதமடைந்துள்ளது.
பொலிஸாரின் தலையீட்டுடன் எரிவாயுவை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதால் மக்களின் நாளாந்த நடவடிக்கைகள் இயல்பு நிலைக்கு திரும்பியதாகவும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
















சகோதரி பவதாரணி பாடலை பாடிய போட்டியாளர், எமோஷ்னல் ஆன யுவன், வெங்கட் பிரபு.. சூப்பர் சிங்கர் 11 புரொமோ Cineulagam

siragadikka aasai: படுமோசமான முத்து.. யாரும் எதிர்பார்க்காத திருப்பம்- பேரானந்தத்தில் விஜயா Manithan

ரோபோ ஷங்கர் மறைவு மேடையில் எமோஷ்னலாக பேசிய அவரது மனைவி மற்றும் மகள்.. கண்ணீரில் அரங்கம், வீடியோ Cineulagam
