கொக்குதொடுவாய் மனித புதைகுழி விவகாரம்: வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் விடுத்துள்ள கோரிக்கை(Photos)
ஐ.நா கூட்டத்தொடரில் கொக்குதொடுவாய் விடயத்தை கூர்ந்து கவனிக்க வேண்டும் என வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கத்தின் உபசெயலாளர் சபிதா தெரிவித்துள்ளார்.
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு நடைபெறும் இடத்தினை பார்வையிட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயெ இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்
மேலும் தெரிவிக்கையில்,
சான்றாதாரம்
யுத்தத்திற்கு பின்னர் இறந்த பெண் போராளிகள், எங்களது பிள்ளைகளின் உடல்கள் போலத்தெரிகின்றது. இதனை இங்கு கிடைக்கப்பெற்ற ஆடைகள், உள்ளாடைகளினை வைத்து உறுதிப்படுத்த முடிகின்றது.
ஐ.நா கூட்டத்தொடர் நடக்கும் வேளையில் இது சம்பந்தமான விடயங்களை ஐ.நா கூர்ந்து கவனிக்க வேண்டும். ஐக்கிய நாடுகள் சபை ஆரம்ப காலத்தில் எம் பிரச்சினைகளை முன்னோக்கி எடுத்திருந்தாலும் இம்முறை இது பெரிய சான்றாக இருக்கின்றது.
தமிழ் பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி
எம் பிள்ளைகள் மிலேச்சதனமாக கொன்று குவிக்கப்பட்டு புதைக்கப்பட்டிருக்கின்றார்கள். இது ஒரு புதைகுழி அல்ல வடக்கு கிழக்கு பகுதிகளில் இன்னும் பல இருக்கலாம். கடந்த காலத்தில் கிருஷாந்தி போன்ற பெண் பிள்ளைகளின் மரணத்தினை சாதாரணமாக எடுத்தது போன்று இருந்தாலும் இவை தமிழ் பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியாகவே பார்க்கின்றோம்.
எனவே ஐக்கிய நாடுகள் சபை அவர்களை மத்தியஸ்தர்களாக முன்னிலைப்படுத்தி எமக்கு நல்லதொரு தீர்வினை பெற்றுத்தர வேண்டும் என மேலும் அவர் குறிப்பிட்டார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





மாகாணசபை கழுமரத்தில் சுமந்திரன் ஏறுவாரா..! 17 மணி நேரம் முன்

ஷார்ஜாவில் தூக்கில் தொங்கி இறந்த கேரள பெண்: இந்தியா திரும்பிய கணவர் விமான நிலையத்தில் கைது News Lankasri

உடல் உறையும் நிலையில் லொறிக்குள் சிக்கியிருந்த புலம்பெயர்ந்தோர்... சாரதியால் அம்பலமான கொடூரம் News Lankasri
