கிழக்கிலங்கையில் முருக வழிபாடும் வரலாறும் வழமைகளும் நூல் வெளியீட்டு நிகழ்வு
கலாநிதி வா.குணபால சிங்கம் எழுதிய 'கிழக்கிலங்கையில் முருக வழிபாடும் வரலாறும் வழமைகளும்' எனும் நூல் வெளியீடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த நூல் வெளியீட்டு நிகழ்வு, நேற்றையதினம் (14.06.2024) கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்த அழகிய கற்கை நிறுவகத்தில் மு.ராஜரத்தினம் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் வா.கனகசிங்கம் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளர் பாரதி கென்னடி, மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், இலக்கியவாதிகள், மாணவர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
நூலின் பயன்
இந்நூல் கல்விப் பொதுத் தராதர உயர்தரத்தில் கலைப்பிரிவில் கல்வி கற்கும் மாணவர்களுக்கும் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் பெரிதும் உதவவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |