போதிய வசதிகள் இன்றி தவிக்கும் கிண்ணியா மாணவர்கள்
கிண்ணியா வலயக் கல்வி பிரிவுக்குட்பட்ட முள்ளிப்பொத்தானை தி/கிண். புகாரி நகர் முஸ்லிம் மகாவித்தியாலயத்தில் போதிய கட்டிட வசதிகள் இல்லாத காரணத்தால், மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகள் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளன.
பிள்ளைகளும் ஏனைய பாடசாலை மாணவர்களைப் போலவே சிறந்த கல்வியைப் பெறுவதற்கான உரிமை கொண்டவர்கள். அவர்களுக்கு தேவையான கற்றல் சூழலை உருவாக்குவது காலத்தின் கட்டாயமாகும்.
எனவே, பாடசாலைக்குக் கிடைக்க வேண்டிய கல்வி வளங்கள் மற்றும் கட்டிட வசதிகளை சரியான முறையில் பங்கீடு செய்து வழங்குவதுடன், இப்பாடசாலையின் கல்வி வளர்ச்சி மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்தியில் மாகாண கல்வித் திணைக்களம், மாகாண கல்வி அமைச்சு மற்றும் கிண்ணியா கல்வி வலய அதிகாரிகள் விசேட கவனம் செலுத்துமாறு பெற்றோர்கள் சார்பாக மிகவும் வினயமாகக் கேட்டுக்கொள்கின்றனர்.


நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 20 Evening