இலங்கையில் பயிர்களை சேதப்படுத்தும் ஆறு விலங்குகளை கொல்ல அனுமதி
பயிர்களை அழிக்கும் குரங்குகளை கொல்ல விவசாயிகளுக்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
உருளைக்கிழங்கு விவசாயிகளுடனான சந்திப்பின் போது, குரங்குகள் அப்பகுதியில் உருளைக்கிழங்கு பயிரிட முடியாமல் பயிர்களை நாசம் செய்வதாக அமைச்சரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விலங்குகளின் பட்டியல்
இதற்கு பதிலளித்த அமைச்சர், குரங்குகள் உட்பட பயிர்களை அழிக்கும் ஆறு விலங்குகள் இலங்கையில் பாதுகாக்கப்பட்ட விலங்குகள் பட்டியலில் இருந்து அண்மையில் நீக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மயில்கள், குரங்குகள், டோக் மக்காக்கள், அணில்கள், முள்ளம்பன்றிகள் மற்றும் காட்டுப்பன்றிகள் ஆகியவை சமீபத்தில் பாதுகாக்கப்பட்ட விலங்குகள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.
எனவே வெளிநாட்டில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் பயிர்களை அழிக்கும் விலங்குகளின் சிக்கலைத் தீர்க்க வேறு வழிகள் இல்லை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்கா, சீனாவின் மேலாதிக்கத்திற்கு அச்சுறுத்தல்: 3.5 பில்லியன் தங்கம் டெபாசிட் கண்டுபிடிக்கப்பட்ட நாடு News Lankasri

பாகிஸ்தான், சீனாவுக்கு மேலும் ஒரு கெட்ட செய்தி... ET-LDHCM ஏவுகணையை சோதிக்க தயாராகும் இந்தியா News Lankasri

தக் லைஃப் படத்தில் சிம்பு ரோலில் முதன் முதலில் நடிக்கவிருந்த நடிகர் யார் தெரியுமா! அட இவரா Cineulagam

சர்ச்சைகளுக்கு நடுவில் குட் நியூஸ் சொன்ன ரவிமோகன்.. ஆடிப்போன திரையுலகம்- குவியும் வாழ்த்துக்கள் Manithan

மருத்துவமனையில் ஏற்பட்ட சம்பவம், சீதாவை நினைக்கும் முத்து, என்ன ஆனது?.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
