கிளிநொச்சியில் பாதுகாப்பான புகையிரதக் கடவை இன்மை: மக்கள் விசனம் (Photos)
கிளிநொச்சி மாவட்ட பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட இந்திராபுரம் கிராமத்தில் முக்கியமான புகையிரத வீதிகள் சிலவற்றுக்கு புகையிரத பாதுகாப்பு கடவைகள் போடப்படாமையால் சிரமங்களை எதிர்கொள்வதாக அப்பகுதி பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
இக்கிராமமானது 2017 ஆம் ஆண்டில் இருந்து கன்னிவெடி அகற்றப்பட்டு மீள் குடியேற்றப்பட்டு வருகின்றது.
150 குடும்பங்கள் வாழும் கிராமம்
இக்கிராமத்தில் சுமார் 150 குடும்பங்கள் வசித்து வருகின்ற நிலையில் இந்திராபுர கிராம மக்கள் செல்லும் பிரதான வீதியில் புகையிரத கடவை ஒன்று உள்ளது. அந்த கடவை எவ்வித பாதுகாப்பும் இன்றி காணப்படுகிறது.
குறித்த கடவையை கடந்தே இக்கிராமத்திற்கான பாடசாலை அமைந்துள்ளதால் அதிகளவில் பாடசாலை செல்லும் மாணவர்களே பாதிப்படைந்து வருகின்றனர்.
மக்கள் கோரிக்கை
குறித்த கடவையை பாதுகாப்பானதாக அமைத்து தருமாறு கிராம மக்கள் மீள் குடியேற்றப்பட்ட காலத்தில் இருந்து அனைத்து தரப்பினருக்கும் இது தொடர்பாக கவனத்திற் கொண்டு வரப்பட்டும் இதுவரையில் எதுவித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
எனவே
குறித்த விடயத்தை கவனத்திற்கொண்டு விரைந்து தமக்கான வீதியை பாதுகாப்பானதாக
அமைத்து தருமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.








மோகன்லால் படத்தை பின்னுக்கு தள்ளி, மலையாளத்தில் நம்பர் 1 இடத்தை பிடித்த லோகா!! மாபெரும் வசூல் சாதனை Cineulagam
