குப்பை மேடாக மாறும் கிளிநொச்சி நீதிமன்றிற்கு அருகாமையில் உள்ள வீதி!
கிளிநொச்சி நீதிமன்றிற்கு அருகாமையில் உள்ள வீதியானது எந்தவித பராமரிப்பும் இல்லாமல் காணப்படுவதாக பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
குறித்த விதியில் அதிகளவான கழிவுகள் மற்றும் மிருக எச்சங்கள் பிளாஸ்டிக் பொருட்கள் ஆங்காங்கே குவிக்கப்பட்ட நிலையில் காணப்படுவதாக கூறப்படுகிறது.
நீதிமன்றத்திற்கு வரும் நபர்கள் குறித்த வீதியினை பிரதானமாக பயன்படுத்தி வருவதாகவும், இவ்வாறு எந்தவித பராமரிப்பும் இல்லாமல் இந்த வீதி இருந்தால் குறுகிய காலத்தில் மிகப்பெரிய குப்பைமேடாக மாறிவிடும் என அச்சம் வெளியிடப்படுகிறது.
கரைச்சி பிரதேச சபை
இவ்விதியானது கரைச்சி பிரதேச சபைக்கு உட்பட்ட வீதி என தெரியவருகின்றது.
குறித்த வீதியில் துர்நாற்றம் வீசுவதால் மக்கள் அன்றாட பயணத்தினை மேற்கொள்ளும்போது அசௌகரியங்களை எதிர்கொள்வதாக கூறப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

நான்கு கனேடியர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றிய சீனா... கொந்தளிக்கும் சர்வதேச அமைப்புகள் News Lankasri
