கிளிநொச்சி மாவட்ட மோட்டார் வாகன போக்குவரத்து பிரிவின் அறிவிப்பு!
கிளிநொச்சி மாவட்ட மோட்டார் வாகன போக்குவரத்து பிரிவின் அறிவிப்பு ஒன்றினை விடுத்துள்ளனர்.
கிளிநொச்சி மாவட்ட மோட்டார் வாகன போக்குவரத்து பிரிவில் எழுதுதல், வாசித்தல் திறன் குறைத்தவர்களுக்கான வாய்மொழிப் பரீட்சையினை எதிர்வரும் (2023.10.06) திகதி வெள்ளிக்கிழமை நடாத்துவதற்கு மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மோட்டார் போக்குவரத்து திணைக்களம்
எனவே மேற்படி காரணங்களின் நிமித்தம் இதுவரை சாரதி அனுமதிப்பத்திரம் பெறத்தவறியவர்கள் இவ் அரிய சந்தர்ப்பத்தை தவறவிடாது பயன்படுத்திக்கொள்ளுமாறு கிளிநொச்சி மாவட்ட மோட்டார் வாகன போக்குவரத்து பிரிவின் பிரதம மோட்டார் வாகன பரிசோதகர் G.H.D.K விஜயசேகரா அறிவித்துள்ளார்.
மேலும், பரீட்சைக்கு தோற்றுவதற்கு முன் A9 வீதி, கிளிநொச்சி - பழைய கச்சேரி
வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட மோட்டார் வாகன போக்குவரத்து பிரிவின் மாவட்ட
காரியாலயத்துடன் தொடர்பு கொண்டு பதிவுகளை மேற்கொள்வதுடன், மேலதிக தகவல்களை
பெற்றுக்கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.

சீன தயாரிப்பு விமானத்தால் பாகிஸ்தான் சுட்டு வீழ்த்திய 2 இந்திய விமானங்கள்: அமெரிக்க நிபுணர்கள் உறுதி News Lankasri

ரஜினி, கமல் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்துகொண்ட ஐசரி கே கணேஷ் மகள் திருமணம்.. புகைப்படங்கள் இதோ Cineulagam
