கிளிநொச்சியின் முக்கிய குள பகுதிகளை மறுசீரமைப்பதற்கான ஏற்பாடுகள் குறித்து கலந்துரையாடல்
கிளிநொச்சி குளம் மற்றும் கனகாம்பிகை குளத்தின் கீழான நீர்வழிந்தோடும் பிரதேசங்களை பாதுகாப்பது தொடர்பாக மாவட்ட மட்டத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்று இம்மாதம் 13ஆம் திகதி மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெற்றிருந்தது.
இக்கலந்துரையாடலில் குள ஒதுக்கப் பகுதிகள், சட்டவிரோத ஆக்கிரமிப்புகள், நில எல்லை நிர்ணயம், மற்றும் எதிர்கால பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
கண்காணிப்பு முறைமை
குளப்பகுதி மற்றும் குளத்தின் கீழான நீர் வழிந்தோடும் பகுதிகளில் சட்டவிரோதமாக மேற்கொள்ளப்படும் கட்டிட நிர்மாணங்கள் மற்றும் நில பயன்பாடுகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டதுடன், அவற்றை கட்டுப்படுத்த துறைகள் இடையேயான ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டது.

அதற்கமைய குறிப்பிடப்பட்ட இடங்களுக்கான களவிஜயம் இன்றையதினம் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மற்றும் துறைசார் திணைக்களங்களின் அதிகாரிகளின் பங்குபற்றுதலுடன் மேற்கொள்ளப்பட்டது.
கள ஆய்வின் போது ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகள் நேரில் பார்வையிடப்பட்டு, நில எல்லைகள் அடையாளப்படுத்தப்பட்டதுடன், தேவையான சட்ட மற்றும் நிர்வாக நடவடிக்கைகள் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டது.
இப் பகுதிகளை பாதுகாக்க நிரந்தர கண்காணிப்பு முறைமை அறிமுகப்படுத்துதல், எல்லைக் கற்கள் நிறுவுதல் மற்றும் பொதுமக்கள் விழிப்புணர்வு நடவடிக்கைகள் உட்பட சட்டவிரோத ஆக்கிரமிப்புக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு புனரமைப்பு வேலைகளை விரைவாக ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கு மக்களின் ஒத்துழைப்பின் அவசியம் குறித்து நேரடியாக பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டது.



நிலா-சோழனுக்கு கிடைத்த உயில், ஆனால் அதில் இருந்தது என்ன தெரியுமா?... அய்யனார் துணை எபிசோட் Cineulagam