அரசின் செயற்றிட்டங்களுக்கு பயனாளிகளின் அக்கறையும் அவசியம்: டக்ளஸ் வலியுறுத்து
முன்னெடுக்கப்படும் செயற்றிட்டங்கள் ஒவ்வொன்றினதும் முழுமையான வெற்றிக்கு அதிகாரிகள் மட்டுமல்லாது பெற்றுக்கொள்ளும் பயனாளிகளும் அதிக கரிசனையும் அக்கறையும் செலுத்த வேண்டும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன் அவ்வாறான ஒரு நிலை உருவாக்கப்படும் போதுதான் வழங்கப்படும் திட்டங்கள் அல்லது அபிவிருத்திகள் ஒவ்வொன்றும் எதிர்பார்க்கும் முழுமையான இலக்கை அடையும் என்றும் தெரிவித்துள்ளார்.
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று (27.03.2024) நடைபெற்ற கிளிநொச்சி மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.
விடுவிக்கப்பட்ட காணிகள்
தொடர்ந்தும் அவர் கூறுகையில்,
“அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் விடுவிக்கப்பட்ட காணிகள் தொடர்பில் பல்வேறுபட்ட செய்திகள் ஊடகங்களில் வெளியாகின்றது.
நீண்டகாலமாக இராணுவத்தினரது தேவைக்காக பயன்படுத்தப்பட்டு வந்த குறித்த காணிகள் விடுவிக்கப்பட்ட நிலையில் அக்காணிகளை உரியவர்கள் இன்னமும் முழுமையாக பொறுப்பெடுக்காத நிலை காணப்படுகின்றது.
குறிப்பாக பற்றைகளால் சூழ்ந்துள்ள காணிகளை துப்புரவு செய்து காணிகளின் உரிமையாளர்கள் காணிகளை வரையறை செய்து எல்லையிட்டு பாதுகாக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள கால அவகாசம் தேவையாக உள்ளது.
இதனால் குறித்த காணிகளை உரிமையாளர்கள் இதுவரை பொறுப்பெடுக்காத நிலை காணப்படுகின்றது. இதனால் அந்த காணிகள் மோசடிகளுக்குள்ளாகும் நிலை உருவாகலாம்.
எனவே, அக்காணிகளின் உரித்தாளர்கள் தமது காணிகளை உரியவகையில் எல்லையிட்டு பொறுப்பெடுக்கும் வரை அக்காணிகளின் பாதுகாப்பை பொலிஸாரும் படையினரும் பாதுகாத்துக் கொடுப்பது அவசியமாகும்.
அதுமட்டுமல்லாது அக்காலப்பகுதிவரை காணிகளின் பாதுகாப்பை உறுத்திப்படுத்திக் கொடுக்கும் பொறுப்பு பாதுகாப்பு படையினருக்கும் பொலிஸாருக்கும் உள்ளது.
எனவே காணிகளின் உரித்தாளர்கள் அதை பெற்றுக்கொள்ளும்வரை பொலிஸாரும் இராணுவத்தினரும் அக்காணிகளுக்கு பாதுகாப்பை வழங்கவெண்டும்” என கூறியுள்ளார்.
குறித்த கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன் செ.கஜேந்திரன், அங்கஜன் இராமநாதன் மற்றும் வடக்கு மாகாண பிரதம செயலாளர் எஸ். இளங்கோவன் வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர்கள், வடமாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

காணி நிலம் வேண்டும் பராசக்தி 2 நாட்கள் முன்

ட்ரோன் தொழில்நுட்பத்தில் 2 பில்லியன் பவுண்டு முதலீடு - இராணுவத்தை சக்திவாய்ந்ததாக்க மாற்றும் பிரித்தானியா News Lankasri

இந்தியாவிற்கு சிக்கலை ஏற்படுத்தும் நகர்வு... வங்கதேசத்தில் ஆயுதங்களை தயாரிக்க துருக்கி முடிவு News Lankasri

எடை குறைக்க ஜிம் உடற்பயிற்சிகள் மட்டும் போதாது..நீதா அம்பானியின் உடற்பயிற்சி நிபுணர் விளக்கம் Manithan

Optical illusion: உங்கள் கண்களுக்கு உயிர் உள்ளது எனில் இதில் இருக்கும் நேரான “28” எங்கே உள்ளது? Manithan
