பயண கட்டுப்பாட்டில் சூதாட்டம் - 04 இலட்சத்து 15 ஆயிரம் ரூபாய் மீட்பு
கிளிநொச்சி - மருதநகர் பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த 14 பேரை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த வேளையில் பொலிஸாரிடம் சிக்கியுள்ளனர். சந்தேக நபர்களிடமிருந்து 04 இலட்சத்து 15 ஆயிரம் ரூபாய் பணம் மீட்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில், கிநொச்சி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்புப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய குறித்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
இதேவேளை குறித்த நபர்களுக்கு எதிராக பயணக்கட்டுப்பாட்டினை மீறினார்கள் என்ற குற்றச்சாட்டிலும் வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது.