கிளிநொச்சி அக்கராயன் பிரதேச வைத்தியசாலை தொடர்பில் வெளியான தகவல் (Video)
கிளிநொச்சி - அக்கராயன் பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதற்கு மக்கள் அச்சமடையத் தேவையில்லையென்று அக்கராயன் பிரதேச பொது அமைப்புக்களும், பிரதேச மக்களும் தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி - அக்கராயன் வைத்தியசாலையில் கடமையிலிருந்த வைத்தியர் ஒருவர் நோயாளி ஒருவருக்கு சிகிச்சை மேற்கொண்டமை தொடர்பில் அண்மையில் சமூக ஊடகங்களில் விஷமத்தனமான கருத்துக்கள் பரப்பப்பட்டுவந்துள்ளன.
அக்கராயன் வைத்தியசாலையில் வைத்தியர்களை கடமையாற்ற விடாது அவர்களை வெளியேற்றுவதற்கு செய்யப்படுகின்ற ஒரு திட்டமிட்ட குழுவின் செயற்பாடு என்றும் இதை தாங்கள் வன்மையாக கண்டிப்பதாகவும் அக்கராயன் பிரதேச அமைப்புகளும், மக்களும் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது,
இப் பிரதேசத்தில் அதிகளவான மக்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சைக்காக வரும்
நோயாளிகளுக்கு எந்த விதமான பாதிப்புகளும் இன்றி வைத்தியர்கள் சேவைகளை வழங்கி
வருகின்றனர் எனவும் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளனர்.