கோட்டாபய அரசை வீழ்த்திய முக்கிய நபர்: வெளிவரும் தகவல்கள் - செய்திகளின் தொகுப்பு
கோட்டாபய ராஜபக்ச, ஜனாதிபதியாகச் செயற்பட்டாலும் பி.பி.ஜெயசுந்தரவே நாட்டை நிர்வகித்ததாக அமைச்சரவையின் முன்னாள் செயலாளர் எஸ்.அமரசேகர தெரிவித்துள்ளார்.
சிங்கள ஊடகவியலாளர் ஒருவரின் நேர்காணலின்போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தாம் 50 வருட அரச சேவை அனுபவத்தைக் கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ள அவர், மகிந்த ராஜபக்சவை தமக்குப் பிடிக்கும் என்ற போதும், தாம் ராஜபக்சவாதி அல்ல என்று குறிப்பிட்டுள்ளார்.
கோட்டாபய ராஜபக்ச அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் முதலாவதாக மேற்கொள்ளப்பட்ட வரி குறைப்பு தொடர்பான யோசனையின் போது பி.பி.ஜெயசுந்தரவே, அதனை அவசரமாக நிறைவேற்றினார் என்று அமரசேகர தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய மதியநேர செய்திகளின் தொகுப்பு,