பசிலுக்காக பதவி துறந்தவருக்கு அவுஸ்திரேலியாவிற்கான உயர்ஸ்தானிகர் பதவி
தமக்கு அவுஸ்திரேலியாவுக்கான உயர்ஸ்தானிகர் பதவி அறிவிக்கப்பட்ட போதும் அதனை தாம் ஏற்கவில்லை என பொதுஜன பெரமுனவின் முன்னாள் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயந்த கெட்டகொட தெரிவித்து இருக்கிறார்.
பசில் ராஜபக்ஷ நாடாளுமன்றம் வருவதற்காக ஆளுங்கட்சியின் தேசிய பட்டியல் உறுப்பினரான ஜெயந்த கெட்டகொட அண்மையில் தமது நாடாளுமன்ற பதவியை விட்டு விலகினார்.
இதனையடுத்து பசில் ராஜபக்ஷ நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்று, பின்னர் நிதி அமைச்சராக பதவி பிரமாணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் பசில் ராஜபக்ஷவுக்கு நாடாளுமன்ற பதவியை விட்டு கொடுத்தமைக்காக தமக்கு அவுஸ்திரேலியா உயர்ஸ்தானிகர் பதவி வழங்கப்படுவதாக அரசாங்கம் அறிவித்து இருந்தது.
அதனை விட வேறு சில வாய்ப்புகளும் தமக்கு வழங்கப்பட்டன என்றாலும் அவற்றை தாம் நிராகரித்து விட்டதாக ஜெயந்த கெட்டகொட குறிப்பிட்டு இருக்கிறார்.
தம்மை பொறுத்த வரையில் நாட்டுக்கு சிறந்த ஒருவர் வரவேண்டும் என்பதை கருத்திற் கொண்டே தாம் செயற்பட்டதாகவும் அதற்காக மாற்று வாய்ப்புக்களை தாம் எதிர்பார்க்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே தொடர்ந்தும் பசில் ராஜபக்ஷவின் சேவைக்கு தாம் துணையாக இருக்க போவதாகவும் ஜெயந்த கெட்டகொட குறிப்பிட்டு இருக்கிறார்.
தமிழ்நாடு அரசியல் களத்தை அதிரவைத்துள்ள மாபெரும் புரட்சி! அதிரடி திருப்பங்களுடன் வெளியாகவுள்ள இறுதி முடிவுகள்
கனேடிய பொலிஸாரின் அலட்சியத்தால் பலியான யாழ். இளைஞனால் 6 பேருக்கு மறுவாழ்வு.. உடலை காண காத்திருக்கும் தாய்
தமிழக சட்டமன்ற தேர்தல்! பல மணி நேரமாகியும் வாக்களிக்க வராத மக்கள்! பரபரப்புக்கு மத்தியில் முதல் வாக்கை பதிவு செய்த பெண்
விஜய் ஒரு வழிமறிப்பாளர் மட்டுமே! கூட்டம் வாக்குகளாக மாறுமா - சர்வதேச ஊடகங்களில் முக்கியச் செய்தியாக தமிழக தேர்தல்
வாய்ப்பே இல்லை... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ட்ரம்பிற்கு அடுத்த நெருக்கடி அளித்த ஈரான் News Lankasri
விஜய் டிவியில் ஹிட் சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் சுஜிதா... எந்த தொடர் தெரியுமா? Cineulagam
புஷ்பா 2 சாதனையை முறியடித்ததா துரந்தர் 2.. குறைந்த நாட்களில் ரூ. 1000 கோடி வசூல் செய்த படம் எது..? Cineulagam
காந்திமதியை வீட்டைவிட்டு வெளியே போகச்சொன்ன கதிர், ஷாக்கான குடும்பம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam