கெஹலியவின் நட்ட ஈட்டை கிளிநொச்சியில் பயன்படுத்தியிருக்கலாம் - பிமல் ரத்நாயக்க
கெஹலிய ரம்புக்வெல்ல பெற்ற நட்ட ஈட்டை, யுத்தத்தால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மாவட்டத்தை அபிவிருத்தி செய்ய பயன்படுத்தியிருக்கலாம் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சிக்கு நேற்றையதினம்(09.02.2025) விஜயம் மேற்கொண்டிருந்த அவர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில்,
“பாதுகாப்பற்ற புகையிரதக் கடவைகள் நாடு முழுவதும் காணப்படுகிறது. அது போல கடமைகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ஊதியம் போதாது. அவர்களின் சம்பளமும் அதிகரிக்கப்பட வேண்டும்.
விரைவான நடவடிக்கை
அந்த பிரச்சினைக்கு மக்களுடனும் கலந்துரையாடி தீர்வு எட்டப்பட வேண்டும். அதனை விரைவில் செய்வோம்.
கிளிநொச்சி வைத்தியசாலையில் மின்பிறப்பாக்கி இயங்காத விடயம் தொடர்பில் எமது மாவட்ட அமைப்பாளர் பார்வையிட்டு, சுகாதார அமைச்சுக்கு தகவல் வழங்கி விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
![Gallery](https://cdn.ibcstack.com/article/21e833cd-d046-4240-9d7b-b29f3794862c/25-67a9136e913ad.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/e0bb1469-d92d-421f-9036-453413f2b2af/25-67a9136f89634.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/0604d189-f4b7-46f2-95b6-e5de5cabd228/25-67a91370862c8.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/11d8ccd8-15f7-438d-9c05-9517f84674de/25-67a913717f654.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/ed0bad9e-faa8-4b33-bfe0-669561707b5a/25-67a913727c945.webp)
![தையிட்டி விகாரை : என்ன செய்யலாம்](https://cdn.ibcstack.com/article/eafa3708-ce84-4e22-b6a6-518c2b23980b/25-67a890674e00d-md.webp)