நாட்டு மக்களை ஏமாற்றிய முன்னாள் அமைச்சரின் முடிவு
முன்னாள் அமைச்சரான கெஹலிய ரம்புக்வெல்ல இன்று நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்க மறுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்க கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு அனுமதி வழங்கப்பட்ட போதிலும், அவர் பங்கேற்க மறுத்துள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் குறிப்பிடுகின்றார்.
தரமற்ற மருந்து கடத்தல் தொடர்பான விசாரணை தொடர்பில் முன்னாள் சுகாதார அமைச்சர் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
தரமற்ற மருந்து பொருள்
அத்துடன் கெஹலிய ரம்புக்வெல்ல சுற்றாடல் அமைச்சர் பதவியில் இருந்தும் இராஜினாமா செய்திருந்தார்.
தரமற்ற மருந்துபொருட்களை இறக்குமதி செய்து அதிக விலைக்கு அவற்றை விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இந்த மோசடிக்கு சுகாதார அமைச்சராக செயற்பட்ட கெஹலிய ரம்புக்வெல்ல நேரடியாக செயற்பட்டிருந்தாக குற்றம் சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

6 மாடி கட்டிடத்தின் ரகசிய அறை: பெரும் பணக்காரர்கள் பாதுகாக்கும் ரூ 12,500 கோடி மதிப்பிலான தங்கம் News Lankasri

பாகிஸ்தானுக்கு பெரும் சிக்கல்.... 200 கி.மீ நீள கால்வாய்: தண்டிக்க திட்டமிடும் இந்தியா News Lankasri
