விடுதலைப் புலிகளை எதிர்த்த இந்தியாவை தற்போது அணுகுவது பிழையில்லை - காசி ஆனந்தன்
ஒரு காலத்தில் விடுதலைப் புலிகளை எதிர்த்தது இந்தியா தான் என்பதை நான் மறுப்பதில்லை என காசி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
தமிழ் நாட்டிலுள்ள தமிழ்த்தேசியச் செயற்பாட்டாளர்களின் முயற்சியினால் கடந்த முதலாம் திகதி இரண்டாவது வட்டுக்கோட்டைத் தீர்மானம் என்ற தலைப்பில் ஒரு இணையவழி மாநாடு இடம்பெற்றது.
இந்த மாநாட்டிற்கு காசி ஆனந்தன் தலைமை தாங்கியிருந்தார். இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இந்தியா தான் எமக்கு எதிராக இலங்கைக்கு பயிற்சி கொடுத்தது, குண்டுகளை கொடுத்தது, யுத்தத்தை நடத்தியது. நான் அதை மறுப்பதில்லை. ஆனால் காலத்தில் போக்கில் இன்று அந்த இந்தியாவை அணுகுவதை பிழையாக நினைக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.