கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட ட குடும்பங்களுக்கு வெளியான முக்கிய தகவல்
கரூர் துயர சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்குத் தேவையான பள்ளி, கல்லூரிச் செலவுகளை ஏற்கவும், எங்கள் குழுமத்தில் வேலை வாய்ப்பை வழங்கவும், ஆயுள் காப்பீடு செய்யவும் தயாராக இருப்பதாக தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
அவர் இந்த விடயம் தொடர்பில் வெளியிட்டுள்ள பதிவில்,
கரூர் துயர சம்பவம்
அன்பான வணக்கம், “கரூர் துயர சம்பவம் இன்றும் என் இதயத்தை கடைந்துகொண்டே இருக்கிறது. உயிரிழந்தவர்களுக்கு ஈடாக நாம் எதையும் செய்துவிட முடியாது. ஆனால் அவர்களின் கனவுகளை நிறைவேற்ற துணைநிற்க முடியும்.
அந்த வகையில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்குத் தேவையான பள்ளி, கல்லூரிச் செலவுகளை ஏற்கவும், எங்கள் குழுமத்தில் வேலை வாய்ப்பை வழங்கவும், ஆயுள் காப்பீடு செய்யவும் நான் தயாராக இருக்கிறேன்.
காயம்பட்ட இதயங்களுக்கு களிம்பு தடவும் என்னுடைய சிறு முயற்சி இது” என குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நடத்தப்பட்டு வரும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி 2 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



