குடிநீர் இணைப்பில் புறக்கணிக்கப்பட்ட காரைநகர் - தவிசாளர் சுட்டிக்காட்டு
காரைநகர் பகுதியில் எல்லா பகுதிகளிலும் இன்னமும் குடிநீர் வழங்கல் குழாய்கள் தாழ்க்கப்படவில்லை. நிறைய பிரதேசங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக காரைநகர் பிரதேச சபையின் தவிசாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
காரைநகர் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டமானது நேற்றையதினம்(30.12.2025) நடைபெற்றது.
அதில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
கரையோர பகுதிகளுக்கு அதிகளவான நீர்
காரைநகர் பகுதியில் கரையோர பகுதிகளுக்கே அதிகளவான நீர் தேவை உள்ளது. ஆனால் அங்கே பிரதான குழாய்கள் பொருத்தப்படவில்லை என தவிசாளர் சுட்டிக்காட்டினார்.
அதற்கு உரிய அதிகாரி பதிலளிக்கையில், நீர்த்தாங்கி வரைக்கும் தண்ணீர் வந்துவிட்டது. குழாய் இணைப்புகளை முடித்த பின்னர் மார்ச் முதல் வாரத்தில் குடிநீரை வழங்குவோம்.

அத்துடன் பொது மக்களுக்கு ஏற்படும் சிரமத்தை தவிர்ப்பதற்காக நாங்கள் பிரதேச செயலகத்திடம் விண்ணப்ப படிவங்களை விநியோகித்துள்ளோம்.
அண்ணளவாக 3700 குடும்பங்கள் இங்கே இருந்தாலும் 500 குடும்பங்கள் அளவிலேயே இங்கே விண்ணப்பங்களை மேற்கொண்டுள்ளார்கள்.
காரைநகர் பிரதேச மக்கள் 38 வீத மானியத்தில், 13 ஆயிரத்து 875 ரூபாவை செலுத்தி மக்கள் இந்த இணைப்பினை பெற்றுக் கொள்ள முடியும்.

பெப்ரவரி மாதத்தில் நடமாடும் சேவையை இங்கே மேற்கொண்டு, இணைப்பினை பெற்றுக் கொடுப்பதற்கான வேலையை செய்கின்றோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |