நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டங்கள் (Photos)

Kilinochchi
By Suliyan Mar 10, 2023 07:21 PM GMT
Report

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் இறுதிநாள் அமர்வு இன்று இடம்பெற்ற போது கிளிநொச்சியை சேர்ந்த நபர் ஒருவர் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளார். 

கடந்த ஐந்து வருடங்களாக கரைச்சி பிரதேச சபையின் நிர்வாகத்தில் தான் உட்பட பொது மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தங்களு்ககு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தே இக்கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். 

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டங்கள் (Photos) | Karachchi Pradeshiya Sabha Kilinochchi

கடந்த காலங்களிலும் தான் தனியொரு நபராக கரைச்சி பிரதேச சபையின் அநீதிகளுக்கு எதிராக போராடியிருப்பதாகவும், இன்றும் தனக்கான நீதி கிடைக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார். 

‘பிரான்சின் துயரம் சாய்ந்த கோபுரம், சீனாவின் துயரம் குவாங்கோ நதி, இந்தியாவின் துயரம் கூவம் ஆறு, கிளிநொச்சியின் துயரம் கரைச்சி பிரதேச சபை, ஜேர்மனியின் கொடூர ஆட்சியாளன் கிட்லர், உகண்டாவின் கொடூர ஆட்சியாளன் இடியமீன், கிளிநொச்சி பிரதேச சபையின் கொடூர ஆட்சியாளன் வேழமாலிகிதன்‘ என எழுதப்பட்ட பதாதை ஒன்றையும் துவிச்சக்கர வண்டியில் கட்டியவாறு கரைச்சி பிரதேச சபையின் முற்றத்தில் தனது எதிர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டார்.

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டங்கள் (Photos) | Karachchi Pradeshiya Sabha Kilinochchi

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டங்கள் (Photos) | Karachchi Pradeshiya Sabha Kilinochchi

புத்தளம்

வடமாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை விரிவுபடுத்தக்கோரியும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தும் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட அமைப்பினரினால் ஆர்ப்பாட்டமொன்று புத்தளத்தில் முன்னெடுக்கப்பட்டது.

வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்டு 32 வருடங்களைக் கடந்த பின்பும் வடமாகாண முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றமும் அரச காணிகள் விடுவிக்கப்படாமையும், நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக இனவாத கருத்தை ஊடகங்களில் தெரிவித்தமைக்கு எதிராகவும், ஜனாதிபதி ஆனைக்குழு வடமாகாண முஸ்லிம்களுக்கு உடனடியாக அமைக்கப்படவேண்டுமென்று தெரிவித்தும் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டடுள்ளது. 

குறித்த ஆர்ப்பாட்டம் புத்தளம் தில்லடி ரத்மல்யாய பகுதியில் இடம்பெற்றது.

ஆர்ப்பாட்டத்தின்போது பதாதைகளை ஏந்தியவாறும் பல்வேறு கோஷங்களை எழுப்பிவாறும் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டங்கள் (Photos) | Karachchi Pradeshiya Sabha Kilinochchi

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டங்கள் (Photos) | Karachchi Pradeshiya Sabha Kilinochchi

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டங்கள் (Photos) | Karachchi Pradeshiya Sabha Kilinochchi

முல்லைத்தீவு

முல்லைத்தீவு - மாந்தை கிழக்கு நட்டாங்கண்டல் பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்களுக்கெதிராக நட்டாங்கண்டல் மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர். 

வீட்டில் இருந்த வயோதிபர் ஒருவரை கைது செய்து அழைத்து வந்துள்ளதாகவும்,குறித்த வீட்டில் மணல் இருந்ததாகவும் வீட்டின் உரிமையாளர் மன்னாருக்கு சென்றிருந்த சந்தர்ப்பத்தில் அங்கு வீட்டின் காவலுக்காக இருந்த உரிமையாளரின் தந்தை 68 வயது முதியவரை பொலிஸார் கைது செய்துள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்துள்ளனர். 

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டங்கள் (Photos) | Karachchi Pradeshiya Sabha Kilinochchi

அத்துடன், மணல் அகழ்வில் ஈடுபட்டவர்களை கைது செய்யாது பொலிஸார் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த அப்பாவிகளை கைது செய்வதாகவும் தெரிவித்த மக்கள், பொலிஸார் சட்டவிரோத செயற்பாடுகளை முன்னெடுக்க ஊக்கமளிப்பதாகவும், அப்பாவிகளை பொலிஸார் பழிவாங்குவதாகவும் தெரிவித்துள்ளனர்.

பொலிஸாரால் குறித்த வீட்டில் இருந்து ஏற்றப்பட்ட மணலும் இதுவரை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டுவரப்படவில்லை என்றும் , உரியவரை கைது செய்யாமல் அப்பாவிகள் கைது செய்யப்படுவதாகவும் தெரிவித்த மக்கள்.

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டங்கள் (Photos) | Karachchi Pradeshiya Sabha Kilinochchi

‘கூலிக்கு ஆடு மேய்த்த முதியவரை கைது செய்தமையை கண்டிக்கின்றோம், உடன் விடுதலை செய், நடவடிக்கைக்குரியவரை கைது செய் , சம்மந்தம் இல்லாதவரை விடுதலை செய் போன்ற சுலோகங்களை ஏந்தி போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டனர்.

இதே வேளை கடந்த 25-03-2022 அன்று அனுமதிபத்திர விதிமுறைகளை மீறி மணல் ஏற்றிய குற்றச்சாட்டில் மணலுடன் இரண்டு உழவு இயந்திரங்கள் நட்டாங்கண்டல் பொலிசாரால் கையகப்படுத்தப்பட்டிருந்ததுடன், அன்று இரவே 10 மணியளவில் இரு உழவு இயந்திரங்களும் மின்சாரத்தை இடைநிறுத்தி வெளியில் விடப்பட்டிருந்ததாகவும் மக்கள் மேலும் தெரிவித்திருந்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரிவித்த பொலிஸார் அனுமதியற்ற முறையில் மணல் யாட் வைத்திருந்ததாக 68 வயதுடைய ஒருவரை கைது செய்துள்ளாதாக தெரிவித்துள்ளனர் .


GalleryGalleryGallery
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லுவம், Toronto, Canada

13 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Warwick, England, United Kingdom

03 Sep, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சண்டிலிப்பாய், வவுனியா, Scarborough, Canada

13 Aug, 2025
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கச்சேரியடி, Paris, France, London, United Kingdom

13 Aug, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு

11 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வெள்ளவத்தை

12 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, கரவெட்டி, Montreal, Canada, திருகோணமலை

12 Sep, 2023
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

09 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு, London, United Kingdom

13 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, London, United Kingdom

12 Sep, 2010
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், Markham, Canada, Brampton, Canada

06 Sep, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Brisbane, Australia, Harrow, United Kingdom

06 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, மல்லாகம்

21 Aug, 2024
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, Gants Hill, United Kingdom

04 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனையிறவு இயக்கச்சி

07 Sep, 2020
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US