காங்கேசன்துறை - நாகப்பட்டினம் பயணிகள் போக்குவரத்து கப்பல் சேவை குறித்து வெளியான அறிவிப்பு
காங்கேசன்துறை - நாகப்பட்டினம் இடையிலான பயணிகள் போக்குவரத்து கப்பல் சேவையானது மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சிவகங்கை கப்பல் சேவை நிறுவனத்தின் தலைவர் சுந்தரராஜ் பொன்னுசாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில், எதிர்வரும் 22ஆம் திகதி (22.02.2025) காலை 7.30 மணியளவில் நாகப்பட்டினத்தில் இருந்து பயணத்தை ஆரம்பிக்கும் கப்பலானது காங்கேசன்துறையை வந்தடைந்த பின் மீண்டும் பி.ப 1.30 மணியளவில் காங்கேசன்துறையில் இருந்து பயணத்தை ஆரம்பித்து நாகபட்டினத்தை சென்றடையும்.
பயணச்சீட்டு பதிவு
இந்த நிலையில் www.sailsubham.com என்ற இணையத்தளத்துக்குள் பிரவேசித்து பயணச்சீட்டுகளை பதிவு செய்ய முடியும்.
இந்த கப்பலானது செவ்வாய்க்கிழமை தவிர்ந்து வாரத்திற்கு 6 நாட்கள் சேவையில் ஈடுபடும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


ஈழத் தமிழர் இனி செய்யவேண்டியது என்ன! 21 மணி நேரம் முன்

இந்ர ராசியினர் அவர்களே நினைத்தாலும் பிரபலமாவதை தடுக்க முடியாதாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

இந்தியாவில் சிக்கியுள்ள பிரித்தானிய F-35B போர் விமானம் - ஏர் இந்தியாவின் சலுகையை மறுத்த Royal Navy News Lankasri
