கண்டியிலிருந்து சென்ற பேருந்து விபத்து: 18 பேர் வைத்தியசாலையில் அனுமதி
கண்டியில் இருந்து ஹொரவ்பொத்தானை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தொன்று விபத்துக்குள்ளானதில் 18 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மாத்தளை, கொஹொனாவெல பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்தில் காயமடைந்தவர்கள் நாலந்தா அரச வைத்தியசாலை, தம்புள்ளை அரச வைத்தியசாலை மற்றும் மாத்தளை வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
சேதவிபரம்
இந்த விபத்தின் காரணமாக இலங்கை மின்சார சபைக்கு சொந்தமான மின் கம்பிகள் மற்றும் தொலைபேசி கம்பிகள் மற்றும் அருகில் இருந்த மதில் ஒன்றும் சேதமடைந்துள்ளது.
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து மற்றுமொரு பேருந்தை கடந்து செல்ல முற்பட்ட போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தின் காரணமாக குறித்த வீதியுடனான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதுடன், போக்குவரத்து நெரிசலை சீர்செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 6 நாட்கள் முன்

இனி Talk Of The Town ஆகப்போகிறது எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல்... காரணம் அவரின் என்ட்ரி தான், ஆனால்? Cineulagam

நாளை முதல்... ஐரோப்பிய ஒன்றியத்துக்கு பயணிக்கும் பிரித்தானியர்களுக்கு ஒரு முக்கிய செய்தி News Lankasri

ஜீ தமிழின் கெட்டி மேளம் சீரியல் ரசிகர்களுக்கு வந்த ஷாக்கிங் தகவல்... என்ன இப்படி ஒரு முடிவு எடுத்துட்டாங்க Cineulagam

இந்த புகைப்படத்தில் விஜய்யுடன் இருக்கும் பிரபல நடிகர் யார் என்று உங்களுக்கு தெரியுமா? இதோ பாருங்க Cineulagam

இது என்ன ஸ்கூலா.. எழுந்து நிற்காதது ஒரு பிரச்சனையா? விஜய் சேதுபதியை திட்டும் நெட்டிசன்கள்! Cineulagam
