மாவீரர்களை நினைவேந்த தயாராகும் கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லம்
கிளிநொச்சி – கனகபுரம் துயிலும் இல்லம், மாவீரர் நாளை நினைவேந்துவதற்கு தயாராகி வருகிறது.
தேச விடுதலைக்காக மாண்ட மாவீரர்களை உணர்வெழுச்சியுடன் நினைவேந்துவதற்கு தமிழர் தாயகம் முழுவதும் இன்று (27.11.2025) தயார் நிலையில் உள்ளது.
இன்று மாலை 6.05 மணிக்கு ஆலயங்களில் மணியோசை எழுப்பப்பட துயிலும் இல்லங்கள், வீடுகள், பொது இடங்களில் சமநேரத்தில் சுடர் ஏற்றப்படவுள்ளது.

மாற்றுவீதியினை பயன்படுத்துமாறு அறிவுறுத்தல்
வடக்கு, கிழக்கில் 25இற்கும் மேற்பட்ட துயிலும் இல்லங்கள், மாவீரர் நினைவிடங்கள் மற்றும் விசேடமாக அமைக்கப்பட்ட மாவீரர் நினைவாலயங்களில் உணர்வெழுச்சியுடன் மாவீரர்கள் நினைவேந்தப்படவுள்ளனர்.
இன்று மாலை 4 மணிக்கு பின்னர் கனகபுரம் துயிலுமில்ல முன் வீதி மூடப்பட்டிருக்கும். ஆகையால் இவ்வீதி ஊடாக பயணிப்போர் மாற்றுவீதியினை பயன்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த இலங்கை கிரிக்கெட் வீரரே என் குழந்தைக்கு தந்தை - நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த பெண் News Lankasri