பரபரப்பை ஏற்படுத்தியுள்ள பாடசாலை மாணவியின் மரணம்!பிரதான சந்தேகநபர் தொடர்பில் பல தகவல்கள் அம்பலம்

Kalutara Sri Lanka Sri Lanka Police Investigation
By Dhayani May 10, 2023 11:45 PM GMT
Report

களுத்துறையில் 16 வயது பாடசாலை மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர் தொடர்பில் தற்போது பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த சனிக்கிழமை (06.05.2023 ) களுத்துறை நகரில் உள்ள விடுதி ஒன்றின் மூன்றாவது மாடியில் இருந்து விழுந்ததாக சந்தேகிக்கப்படும் 16 வயதுடைய பாடசாலை மாணவியின் நிர்வாண சடலம் களுத்துறை தெற்கு பொலிஸ் அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில், சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேகநபரான 29 வயதுடைய நபரை 48 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரணை நடத்த பொலிஸாருக்கு களுத்துறை நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

மாணவியின் மரணம் தொடர்பில் மேலதிக விசாரணைகளுக்கு 24 மணித்தியாலங்கள் போதாது எனக்குறிப்பிட்ட பொலிஸார் சந்தேகநபரை அடுத்த 48 மணித்தியாலங்களுக்கு தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றில் அனுமதி கோரிய நிலையில், தற்போது அவர் களுத்துறை தெற்கு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றார்.

பரபரப்பை ஏற்படுத்தியுள்ள பாடசாலை மாணவியின் மரணம்!பிரதான சந்தேகநபர் தொடர்பில் பல தகவல்கள் அம்பலம் | Kalutara School Student Murter Investigaton Update

சந்தேகநபரின் வாக்குமூலம்

இதன்போது சந்தேகநபர் தனது வாக்குமூலத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

குறித்த மாணவியை தனது நண்பர் மற்றும் அவரது காதலியின் உதவியுடன் விடுதிக்கு அழைத்து வந்ததாக பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

இந்த பயணத்திற்காக பிரதான சந்தேகநபர் வெளிநாட்டு மதுபான போத்தலை எடுத்துச் சென்றதாகவும், அது குறித்து இரண்டு இளம்பெண்களும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதாகவும் பிரதான சந்தேக நபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

இதன்பின்னர் இரு மாணவிகள் உட்பட நால்வர் மது அருந்தி,நடனமாடியதாகவும் ஆனால் குறித்த மாணவியுடன் தான் உடலுறவு கொள்ளவில்லை எனவும் சந்தேகநபர் குறிப்பிட்டுள்ளார்.

பரபரப்பை ஏற்படுத்தியுள்ள பாடசாலை மாணவியின் மரணம்!பிரதான சந்தேகநபர் தொடர்பில் பல தகவல்கள் அம்பலம் | Kalutara School Student Murter Investigaton Update

தொலைபேசி மிரட்டல்

இதன்போது மாணவிக்கு அழைப்பு வந்ததாகவும், அவரை மிரட்டுவதற்காக யாரோ ஒருவரால் அந்த அழைப்பு எடுக்கப்பட்டதாகவும் ‘...அசிங்கமான வேலை செய்யாதே என கோபமாக திட்டியதாகவும், சந்தேகநபர் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்ததுடன், மாணவி திடீரென ஜன்னல் அருகே இருந்த நாற்காலியில் ஏறி ஜன்னலின் 2 கதவுகளையும் திறந்து கீழே குதித்ததாகவும் மேலும் கூறியுள்ளார்.

அதன்படி குறித்த மாணவியுடன் வந்த மற்றைய மாணவி அல்லது அவரது காதலன் இந்த அழைப்பை விடுத்திருக்கலாம் என பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

தகவலறிந்து மறைக்கும் நோக்கில் இருவரும் உயிரிழந்த மாணவியின் கைத்தொலைபேசியை ஆற்றில் வீசியிருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இதன்படி மாணவியின் கைத்தொலைபேசியை மீட்டு மரணத்திற்கு காரணமானவர் என சந்தேகிக்கப்படும் அழைப்பை விடுத்த நபரை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

களுத்துறை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் துமிந்த ராஜபக்சவின் பூரண மேற்பார்வையில் இரண்டு விசேட பொலிஸ் குழுக்கள் இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.

எவ்வாறாயினும், பல விதங்களில் சந்தேகங்கள் எழுந்துள்ள நிலையில் சந்தேகநபரின் வாக்குமூலமும் ஆராயப்பட்டு வருவதாக விசாரணைகளை முன்னெடுத்து வரும் உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

பரபரப்பை ஏற்படுத்தியுள்ள பாடசாலை மாணவியின் மரணம்!பிரதான சந்தேகநபர் தொடர்பில் பல தகவல்கள் அம்பலம் | Kalutara School Student Murter Investigaton Update

இரத்த மாதிரி பரிசோதனை

சந்தேகநபரின் இரத்த மாதிரி எடுக்கப்படும் என்றும், சந்தேகநபர் அன்றைய தினம் மது அருந்தியிருந்தாரா என்பது குறித்து மேலும் விசாரிக்கப்படும் என்றும் மன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த சந்தேகநபர் போதைப்பொருள் கும்பல் அல்லது பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புடையவரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பரபரப்பை ஏற்படுத்தியுள்ள பாடசாலை மாணவியின் மரணம்!பிரதான சந்தேகநபர் தொடர்பில் பல தகவல்கள் அம்பலம் | Kalutara School Student Murter Investigaton Update

சந்தேகநபர் இருமுறை திருமணம் செய்து கொண்டவர் எனவும், முதல் திருமணத்தில் இரண்டு பிள்ளைகள் உள்ளவர் எனவும், இரண்டாவது திருமணமான மனைவியுடன் களுத்துறை இசுரு உயன பிரதேசத்தில் உள்ள வாடகை வீட்டில் வசிப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, உயிரிழந்த பாடசாலை மாணவியுடன் தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படும் களுத்துறையில் உள்ள ஆசிரியர் ஒருவரிடம் மாணவியின் கைத்தொலைபேசிக்கு வந்த தொலைபேசி அழைப்பு தொடர்பில் பொலிஸார் தற்போது வாக்குமூலம் பெற்று வருகின்றனர். 

மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, இருபாலை

08 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

12 May, 2025
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, பூந்தோட்டம்

10 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஜேர்மனி, Germany, Scarborough, Canada

25 May, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, புளியங்கூடல், Kaduna, Nigeria, கனடா, Canada

11 Jun, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ்ப்பாணம், சென்னை, India

05 Jun, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

10 Jun, 2015
12ம் ஆண்டு நினைவஞ்சலி
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அல்வாய், கம்பளை, Toronto, Canada, Markham, Canada

30 Apr, 2025
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், பரிஸ், France

31 May, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, பிரான்ஸ், France

09 Jun, 2019
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Ajax, Canada

06 Jun, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், மானிப்பாய், வண்ணார்பண்ணை, Vaughan, Canada

05 Jun, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, பெரியவிளான், Mississauga, Canada

03 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom, அரியாலை

19 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Köln, Germany

04 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, கனடா, Canada

06 Jun, 2020
மரண அறிவித்தல்

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி தெற்கு, கொழும்பு

14 Jun, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US