பரபரப்பை ஏற்படுத்தியுள்ள பாடசாலை மாணவியின் மரணம்!பிரதான சந்தேகநபர் தொடர்பில் பல தகவல்கள் அம்பலம்
களுத்துறையில் 16 வயது பாடசாலை மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர் தொடர்பில் தற்போது பல தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த சனிக்கிழமை (06.05.2023 ) களுத்துறை நகரில் உள்ள விடுதி ஒன்றின் மூன்றாவது மாடியில் இருந்து விழுந்ததாக சந்தேகிக்கப்படும் 16 வயதுடைய பாடசாலை மாணவியின் நிர்வாண சடலம் களுத்துறை தெற்கு பொலிஸ் அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்நிலையில், சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேகநபரான 29 வயதுடைய நபரை 48 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரணை நடத்த பொலிஸாருக்கு களுத்துறை நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
மாணவியின் மரணம் தொடர்பில் மேலதிக விசாரணைகளுக்கு 24 மணித்தியாலங்கள் போதாது எனக்குறிப்பிட்ட பொலிஸார் சந்தேகநபரை அடுத்த 48 மணித்தியாலங்களுக்கு தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றில் அனுமதி கோரிய நிலையில், தற்போது அவர் களுத்துறை தெற்கு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றார்.
சந்தேகநபரின் வாக்குமூலம்
இதன்போது சந்தேகநபர் தனது வாக்குமூலத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
குறித்த மாணவியை தனது நண்பர் மற்றும் அவரது காதலியின் உதவியுடன் விடுதிக்கு அழைத்து வந்ததாக பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
இந்த பயணத்திற்காக பிரதான சந்தேகநபர் வெளிநாட்டு மதுபான போத்தலை எடுத்துச் சென்றதாகவும், அது குறித்து இரண்டு இளம்பெண்களும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதாகவும் பிரதான சந்தேக நபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
இதன்பின்னர் இரு மாணவிகள் உட்பட நால்வர் மது அருந்தி,நடனமாடியதாகவும் ஆனால் குறித்த மாணவியுடன் தான் உடலுறவு கொள்ளவில்லை எனவும் சந்தேகநபர் குறிப்பிட்டுள்ளார்.
தொலைபேசி மிரட்டல்
இதன்போது மாணவிக்கு அழைப்பு வந்ததாகவும், அவரை மிரட்டுவதற்காக யாரோ ஒருவரால் அந்த அழைப்பு எடுக்கப்பட்டதாகவும் ‘...அசிங்கமான வேலை செய்யாதே என கோபமாக திட்டியதாகவும், சந்தேகநபர் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்ததுடன், மாணவி திடீரென ஜன்னல் அருகே இருந்த நாற்காலியில் ஏறி ஜன்னலின் 2 கதவுகளையும் திறந்து கீழே குதித்ததாகவும் மேலும் கூறியுள்ளார்.
அதன்படி குறித்த மாணவியுடன் வந்த மற்றைய மாணவி அல்லது அவரது காதலன் இந்த அழைப்பை விடுத்திருக்கலாம் என பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
தகவலறிந்து மறைக்கும் நோக்கில் இருவரும் உயிரிழந்த மாணவியின் கைத்தொலைபேசியை ஆற்றில் வீசியிருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இதன்படி மாணவியின் கைத்தொலைபேசியை மீட்டு மரணத்திற்கு காரணமானவர் என சந்தேகிக்கப்படும் அழைப்பை விடுத்த நபரை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
களுத்துறை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் துமிந்த ராஜபக்சவின் பூரண மேற்பார்வையில் இரண்டு விசேட பொலிஸ் குழுக்கள் இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.
எவ்வாறாயினும், பல விதங்களில் சந்தேகங்கள் எழுந்துள்ள நிலையில் சந்தேகநபரின் வாக்குமூலமும் ஆராயப்பட்டு வருவதாக விசாரணைகளை முன்னெடுத்து வரும் உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
இரத்த மாதிரி பரிசோதனை
சந்தேகநபரின் இரத்த மாதிரி எடுக்கப்படும் என்றும், சந்தேகநபர் அன்றைய தினம் மது அருந்தியிருந்தாரா என்பது குறித்து மேலும் விசாரிக்கப்படும் என்றும் மன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த சந்தேகநபர் போதைப்பொருள் கும்பல் அல்லது பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புடையவரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேகநபர் இருமுறை திருமணம் செய்து கொண்டவர் எனவும், முதல் திருமணத்தில் இரண்டு பிள்ளைகள் உள்ளவர் எனவும், இரண்டாவது திருமணமான மனைவியுடன் களுத்துறை இசுரு உயன பிரதேசத்தில் உள்ள வாடகை வீட்டில் வசிப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, உயிரிழந்த பாடசாலை மாணவியுடன் தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படும் களுத்துறையில் உள்ள ஆசிரியர் ஒருவரிடம் மாணவியின் கைத்தொலைபேசிக்கு வந்த தொலைபேசி அழைப்பு தொடர்பில் பொலிஸார் தற்போது வாக்குமூலம் பெற்று வருகின்றனர்.

நிபந்தனையுடன் சண்டை நிறுத்த பேச்சுவார்த்தை: ஒப்புக்கொண்ட பாகிஸ்தான்..லண்டனில் தெரிவித்த அதிகாரிகள் News Lankasri

இறந்த பின்னர் இப்படிதான் இருக்கும் - இறந்து 8 நிமிடங்கள் கழித்து உயிர் பிழைத்த பெண் கூறிய விடயம் News Lankasri

இதுவரை தோல்வியையே சந்திக்காத கேப்டன்! எதிர்கொள்ளப்போகும் அவுஸ்திரேலியா..எதிர்பார்ப்பில் WTC இறுதிப்போட்டி News Lankasri
