தென்னிலங்கையில் உயிரிழந்த ஆறு வயது சிறுவன்
களுத்துறையில் இடம்பெற்ற விபத்தில் ஆறு வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பெலவத்த நெலுவ வீதியில் தேயிலை ஏற்றிச் சென்ற லொறியொன்று வீதியை விட்டு விலகி அருகில் உள்ள வீடொன்றில் வீழ்ந்தமையினால் விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் சாரதியும் உதவியாளரும் காயமடைந்துள்ளதாக தினியாவல பொலிஸார் தெரிவித்தனர்.
வீதி விபத்து
யட்டபான 9 மைல்கல் பகுதியில் வசிக்கும் ஆதித்ய புன்சர என்ற சிறுவனே உயிரிழந்துள்ளார்.

பெலவத்தையில் இருந்து தினியாவல நோக்கி பயணித்த லொறி யட்டபாத 9 மைல்கல் பகுதியில் வைத்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
காயமடைந்த லொறியின் சாரதி மற்றும் உதவியாளர் மெகதன்ன வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலதிக விசாரணைகளை தினியாவல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
முள்ளிவாய்க்கால் பேரவலத்திற்கான நீதி.. இன்று வரை கேள்விக்குறியே! 1 மணி நேரம் முன்
செம மாஸ் வரவேற்பு பெற்றுள்ள கருப்பு திரைப்படம்... சந்தோஷத்தில் சூர்யா வெளியிட்ட செம வீடியோ Cineulagam
பாண்டியன் ஸ்டோர்ஸ் அழகே அழகு மகா சங்கமத்தில் அடுத்து வரப்போகும் பரபரப்பான கதைக்களம்... வீடியோவுடன் இதோ Cineulagam
பிரித்தானியாவில் கொல்லப்பட்ட இந்திய இளம்பெண்: நீதி கிடைக்காமல் தவிக்கும் குடும்பத்தினர் News Lankasri