களுபோவில வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ள தீவிர நிலை - வைரலாகும் படங்களுடனான பதிவு
களுபோவில வைத்தியசாலையின் நிலை தொடர்பில் ஊடகவியலாளரொருவர் படங்களுடன் முகப்புத்தகத்தில் இட்ட பதிவொன்று தற்பொழுது வைரலாகி வருகிறது.
அதன்படி குறித்த பதிவில்,
கோவிட் தொற்றுக்கு இலக்கானவர்களை வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு நீண்ட வரிசை காணப்படுவதாகவும், சில மணித்தியாலங்களுக்குள்ளேயே இருவர் கண்முன் இறந்து விட்டதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்தியாவைப் பற்றி படித்த செய்திகளை தற்போது நேரில் பார்க்க முடிவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வார்டில் ஒரு கட்டிலில் இரண்டு அல்லது மூன்று தீவிர நோயாளிகள் இருக்கிறார்கள்.
கட்டில்களுக்கு கீழ் சிலர் உயிருக்கு போராடும் நிலையில், ஒட்சிசனை பெற்றுக் கொள்கின்றார்கள். தரையில் நோயாளிகள் நடக்க பயப்படுகிறார்கள்.
மீதமுள்ள நூற்றுக்கு மேற்பட்ட நோயாளிகள் நீண்ட இருக்கைகளிலும், நாற்காலிகளிலும், மரங்களின் கீழும் மணல் தரையில் படுத்திருக்க வேண்டிய நிலை காணப்படுவதுடன், சிலர் போர்வை கூட இல்லாமல் படுத்திருப்பதை காண முடிகின்றது.
எனவே மக்களை கோவிட் தொற்றிலிருந்து தம்மை பாதுகாத்து கொண்டு மிகவும் கவனமாக இருக்குமாறு அந்த பதிவில் வலியுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் கடந்த சில நாட்களாக இலங்கையில் கோவிட் தொற்றுக்கு இலக்காவோரின் எண்ணிக்கை மற்றும் கோவிட் உயிரிழப்புக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும், நாட்டில் நிலை தீவிரமடைந்து வருவதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.