கல்முனை மாநகர சபை நிதி மோசடிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் (Photos)
தேசிய மக்கள் சக்தியின் கல்முனை செயற்பாட்டாளர்களினால் கல்முனை மாநகர சபையில் வரிப்பண மோசடியுடன் தொடர்புடையவர்களை இனங்கண்டு சட்டத்தின் முன் நிறுத்தக்கோரி ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டம் கல்முனை பஸ்தரிப்பு நிலையத்துக்கு அருகாமையில் நேற்றைய தினம் (13.03.2023) நடைபெற்றுள்ளது.
கல்முனை மாநகரசபையில் இடம் பெற்ற நிதி மோசடி மற்றும் மின்சாரக்கட்டண அதிகரிப்பு, வாழ்க்கை செலவு அதிகரிப்பு, தேர்தலை பிற்போடல், நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்டல் தொடர்பாக பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து இவ்வார்ப்பாட்டம் இடம்பெற்றமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இப்போராட்டமானது தேசிய மக்கள் சக்தியின் கல்முனை பிராந்திய இணைப்பாளர் ஏ.ஆதம்பாவா தலைமையில் பொதுமக்கள் பலரும் ஒன்றிணைந்து முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.















தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

40 வயதுக்கு மேல் திருமணம் செய்துகொண்டது ஏன்?- உண்மையில் எனது வயது 44 இல்லை, நடிகை ஓபன் டாக் Cineulagam

ரூ. 150 கோடி மதிப்பில் தனுஷ் வீட்டின் வெளியே பார்த்திருப்பீர்கள்?- உள்ளே முழு வீட்டை பார்த்துள்ளீர்களா, வீடியோவுடன் இதோ Cineulagam

இது ரகசியமாக இருக்கட்டும்... லண்டனில் 12 வயது சிறுமியிடம் அத்துமீறிய தமிழரின் அருவருக்க வைக்கும் பின்னணி News Lankasri
