கல்முனை மாநகர சபை நிதி மோசடிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் (Photos)
தேசிய மக்கள் சக்தியின் கல்முனை செயற்பாட்டாளர்களினால் கல்முனை மாநகர சபையில் வரிப்பண மோசடியுடன் தொடர்புடையவர்களை இனங்கண்டு சட்டத்தின் முன் நிறுத்தக்கோரி ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டம் கல்முனை பஸ்தரிப்பு நிலையத்துக்கு அருகாமையில் நேற்றைய தினம் (13.03.2023) நடைபெற்றுள்ளது.
கல்முனை மாநகரசபையில் இடம் பெற்ற நிதி மோசடி மற்றும் மின்சாரக்கட்டண அதிகரிப்பு, வாழ்க்கை செலவு அதிகரிப்பு, தேர்தலை பிற்போடல், நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்டல் தொடர்பாக பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து இவ்வார்ப்பாட்டம் இடம்பெற்றமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இப்போராட்டமானது தேசிய மக்கள் சக்தியின் கல்முனை பிராந்திய இணைப்பாளர் ஏ.ஆதம்பாவா தலைமையில் பொதுமக்கள் பலரும் ஒன்றிணைந்து முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.













அந்த குழந்தையா இது!! சிறுத்தை படத்தில் கார்த்தியின் மகளாக நடித்தவர் இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க! சமீபத்திய புகைப்படம்.. Cineulagam
புலம்பெயர்ந்தோர் விடயத்தில் கடுமையாக நடக்கவேண்டாம்: பிரித்தானியாவின் அடுத்த பிரதமருக்கு கடிதம் News Lankasri
சனி வக்ர பெயர்ச்சி 2026: ஜூலை 27 முதல் இந்த ராசிகளின் வாழ்க்கையில் ஏற்படப்போகும் பாரிய மாற்றம்! Manithan