திட்டமிடப்படாத திண்ம கழிவகற்றல்: கல்முனையில் நிரம்பி வழியும் குப்பைகள்(Photo)
கல்முனை மாநகர பிரதேசங்களில் அண்மைக்காலமாக ஒழுங்கான திண்ம கழிவகற்றல் இன்மை காரணமாக திண்ம கழிவுகள் குவிந்து காணப்படுகின்றன.
இந்த திண்ம கழிவுகளை அரச மற்றும் தனியார் காரியாலயங்களுக்கு அருகிலும், பாடசாலைகளுக்கு அருகிலும், சந்திகளிலும், நீர் நிலையங்களிலும், மைதானங்களிலும், கடற்கரை ஓரங்கள் போன்ற பிரதேசங்களிலும் ஒரு சிலர் குப்பைகளை குவித்து வருவதாக பிரதேசவாசிப்பில் விசனம் தெரிவித்துள்ளனர்.
இதனால் இரவில் கட்டாக்காலி மாடுகளும், தெருநாய்களும் குப்பைகளை கிளறி விடுவதனால் பாரிய துர்நாற்றம் வீசுவதோடு குப்பைகள் கொட்டப்படும் இடங்களில் டெங்கு பரவுவதாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளது.
வீதி போக்குவரத்து தடை
வடிகால்களும் மண்ணினால் நிரம்பி நீர் வழிந்தோட முடியாத நிலையில் உள்ளன. சில வடிகால் மூடிகள் நீண்ட காலமாக உடைந்து காணப்படுகின்றன.
இதனால் வீதிபோக்குவரத்தும் சில நேரங்களில் தடைப்படுவதாக மக்கள் விசனம் வெளியிடுகின்றனர்.
கல்முனை மாநகர சுகாதார பிரிவின் பொறுப்பதிகாரியான பிரதம சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர். எம்.ஜே.கே.எம்.அர்ஷத் காரியப்பரை இது தொடர்பாக தொடர்புகொண்டுள்ளனர்.
இது தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில்,
''குறித்த பிரச்சினையை நானும் என் கண்களினால் கண்டேன். இந்த விடயம் மாநகர சுகாதாரத்துறைக்கு ஏற்பட்டுள்ள பாரிய இழுக்காக காண்கிறேன்.
இந்த பிரச்சினைகளை தீர்க்க வாகன வசதிகளோ, வாகன சாரதிகளோ, சுகாதார தொழிலாளிகளோ போதியளவில் கல்முனை மாநகர சுகாதாரப்பிரிவுக்கு வழங்கப்படவில்லை.
மாநகர அதிகார துஸ்பிரயோகங்கள் காரணமாக முதல்வர், ஆணையாளர் ஆகியோரே இந்த நிலைக்கு பொறுப்புக்கூற வேண்டியவர்களாக இருக்கிறார்கள். அவர்களே இவற்றை முடக்கி வைத்துள்ளனர்.
மாகாண உயர் அதிகாரிகளிடம் கோரிக்கை
இதனால் ஏற்படப்போகும் சகல தீமைகளுக்கும் இவர்களே பொறுப்புதாரிகள். இது தொடர்பில் மாகாண உயர் அதிகாரிகளுக்கும் அறிவித்துள்ளோம்.
கல்முனை மாநகர உயர் அதிகாரிகளின் முழுமையான ஒத்துழைப்பும், ஊழலற்ற நிறைவான வளப்பங்கீடும் இருந்தால் இந்த பிரச்சினைகளை அர்ப்பணிப்பு மிக்க மாநகர சுகாதாரப்பிரிவின் ஊழியர் படையணியை கொண்டு முழுமையாக தீர்க்க நான் தயாராக இருக்கின்றேன்.
மாநகர வாகனங்களுக்கு தேவையான எரிபொருள் பிரச்சினைகளை தீர்க்க தன்னால் நடவடிக்கை எடுக்க முடியும்''என தெரிவித்தார்.









23 வயதில் ரூ. 250 கோடி சொத்துக்கு சொந்தக்காரியாக இருக்கும் பிரபல சீரியல் நடிகை!! யார் தெரியுமா? Cineulagam
