மகிந்தவின் தேசத்துரோக செயல்! திட்டம் தீட்டி கொலை செய்யப்பட்ட கஜ்ஜா
போர் முடிவடையப் போகின்றது எனத் தெரிந்தும் எதற்காக போர் நிறுத்தம் வழங்கப்பட்டது? மகிந்தவின் இந்தத் தேசத்துரோக செயல் தொடர்பில் இந்த அரசுக்கு முதுகெலும்பிருந்தால் நிச்சயம் விசாரணை நடத்த வேண்டும் என முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
2009 ஜனவரி 31 முதல் பெப்ரவரி 1 வரை 48 மணிநேரம் போர் நிறுத்தம் வழங்குமாறு மகிந்த ராஜபக்ச அழுத்தம் கொடுத்தார்.
அந்த கால பகுதியில் நாம் முல்லைத்தீவை பிடித்துவிட்டோம்.புதுகுடியிருப்பையும் மும்முனையில் சுற்றிவளைத்துவிட்டோம். அந்த போர் நிறுத்தத்தை மகிந்த ராஜபக்ச வழங்கி இருக்காவிட்டால் 2009 மார்ச் நடுப் பகுதியில் போரை முடிவுக்குக் கொண்டுவந்திருப்போம்.
போர் நிறுத்தம் வழங்கப்பட்ட பிறகு புலிகள் எம்மை திருப்பித்தாக்கினர். நாம் ஆயுதங்களை கீழே வைத்திருந்தோம். ஐந்து கிலோ மீற்றர் வரை பின்னால் வரவேண்டி ஏற்பட்டது. பெருமளவு ஆயுதங்கள் அழிக்கப்பட்டன.
எதற்காக போர் நிறுத்தம் வழங்கப்பட்டது? பிரபாகரன் உள்ளிட்ட புலித்தலைவர்களை தப்பிக்க வைப்பதற்காகவே இது நடந்திருக்கும். இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி எம்மைத் தாக்கலாம் என பிரபாகரன் சிந்தித்துத் தாக்குதல் நடத்தினார். அவர் வாய்ப்பைத் தவற விட்டிருந்தார்.
2005 ஜனாதிபதி தேர்தலின் போது தமிழ் மக்களின் வாக்குகள் ரணிலுக்கு விழுவதைத் தடுக்கும் நோக்கில் விடுதலைப்புலிகளுக்கு மகிந்த தரப்பு பணம் வழங்கியது. அந்தப் பணத்தை வைத்தே கடற்புலிகளுக்குக் கப்பல் கொள்வனவு செய்யப்பட்டது. புலிகளுக்குப் பணம் வழங்கப்பட்டமை தொடர்பில் பசில் ராஜபக்சவும் என்னிடம் தெரிவித்திருந்தார்.
இவ்வாறு நாட்டில் இடம்பெற்ற பல முக்கியமான அரசியல், சமூக, பொருளாதார செய்திகளை உள்ளடக்கிய லங்காசிறியின் விசேட செய்தி தொகுப்பு இதோ...,




