கச்சத்தீவு அந்தோனியார் ஆலய திருவிழா முன்னேற்பாட்டுக் கூட்டம்
கச்சத்தீவு அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா முன்னேற்பாட்டுக் கூட்டம் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் சிவபாலசுந்தரன் தலைமையில் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
இன்று (23.01.2024) இந்த கூட்டம் நடைபெற்றுள்ளது.
பெப்ரவரி மாதம் 23 மற்றும் 24ஆம் திகதிகளில் கச்சத்தீவு அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா இடம்பெறவுள்ள நிலையிலேயே குறித்த ஏற்பாடுகள் தொடர்பில் ஆராயும் பொருட்டு முன்னேற்பாட்டு கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.
அடிப்படை வசதிகள்
குறித்த கூட்டத்தில், இந்த வருடம் இலங்கையிலிருந்து 4000 பக்தர்களும் இந்தியாவில் இருந்து 4000 பக்தர்களும் பங்குபற்ற அனுமதிப்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும், திருவிழாவில் பங்குபற்றுபவர்களுக்கான சுகாதாரம், போக்குவரத்து, பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் உணவு வழங்கல் போன்ற பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டது.
இக்கலந்துரையாடலில் யாழ்ப்பாண இந்திய துணைத் தூதுவராலய அதிகாரிகள், நெடுந்தீவு பிரதேச செயலாளர், நெடுந்தீவு பங்குத்தந்தை, யாழ்ப்பாண மறை மாவட்ட குரு முதல்வர், கடற்படை பிராந்திய பொறுப்பதிகாரி, பொலிஸ் உயரதிகாரிகள், இராணுவ உயரதிகாரிகள் மற்றும் துறை சார் திணைக்களங்களின் தலைவர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |