இராமேஸ்வர கடற்றொழிலாளர்களின் புறக்கணிப்பு: யாழ் மறைமாவட்ட குருமுதல்வர் கருத்து
இராமேஸ்வர கடற்றொழிலாளர்களின் புறக்கணிப்பு காரணமாக படகு சேவைகள் இடம்பெறாததால், கச்சத்தீவு அந்தோனியார் திருவிழாவிற்கு வர விரும்புகின்ற யாத்திரிகர்களுக்கு தடை ஏற்பட்டுள்ளது என யாழ் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் தெரிவித்துள்ளார்.
யாழில் நேற்று (21.02.2024) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவானது, எதிர்வரும் 23 மற்றும் 24ஆம் திகதிகளில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இராமேஸ்வரம் பங்குத்தந்தையின் உறுதி
இந்நிலையில், தடைகளை மீறி யாத்திரிகர்களை கச்சத்தீவிற்கு அனுப்பி வைப்பதற்கு முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக இராமேஸ்வரம் பங்குத்தந்தை உறுதியளித்துள்ளார் எனத் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்த ஆண்டின் மிகப்பெரிய ப்ளாக்பஸ்டர் ‘துரந்தர்: தி ரிவெஞ்ச்’ ஜூன் 4 முதல் ஜியோஹாட்ஸ்டாரில் பிரீமியர்! Cineulagam
ஹார்முஸ் நீரிணையில் இந்திய வணிகக் கப்பல் ஒன்று தாக்கி மூழ்கடிப்பு: பிடியை இறுக்கும் ஈரான் News Lankasri