மலையக காமன் கூத்தின் வரலாறு தெரியுமா..! (Video)
மலையகத்தை தனித்து அடையாளப்படுத்தும் கூத்துக் கலைகளில் காமன் கூத்து, அர்ச்சுனன் தபசு, பொன்னர் சங்கர் முதலான கூத்துக் கலைகள் மலையகத்தின் தோற்றம் முதல் இன்று வரையிலும் பிரதான இடம் வகித்து வருகின்றன.
இந்த நிலையில் காமன் பண்டிகையானது மலையக இந்துக்களின் இறை நம்பிக்கை நிறைந்த விழாவாக அன்று முதல் இன்று வரையிலும் கொண்டாடப்பட்டு வருகின்றது.
காமன் பண்டிகையில் பயண்படுத்தப்படும் இசைக்கருவிகளில் பிரதானமானதாக தப்பிசை அமையப் பெறுகின்ற அதேவேளை மலையக மூத்த காமன் கூத்துக் கலைஞர்களின் வழி வந்த சொல் இசை பாடல்களுக்கு ஏற்றாற் போல தப்பிசைக்கும் தன்மை அமையப் பெருகின்றன.
இவ்வாறு தேர்ச்சி பெற்று பயணிக்கும் காமன் கூத்துக் கலை இன்றைய கதை களத்தில் சற்று மருவி வருவதற்கான தன்மை சற்று வெளிப்பட்டாலும் கூட மலையக மூத்த கலைஞர்களிடம் இருந்து கதை தொகுப்புக்களை மலையக இளைஞர்கள் களத்திலிருந்தே கற்று தேர்ந்து வருகின்ற நிலையானது குறிப்பிடத் தக்கதாகும்.
இது தொடர்பான விரிவான தொகுப்பு இவ்வார கதை கேளு நிகழ்ச்சியில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

கடைசி டெஸ்டில் ஏஞ்சலோ மேத்யூஸ்! நீ உன் தேசத்திற்கு உண்மையான சேவகன் - ரோஹித் ஷர்மா பிரியாவிடை News Lankasri

300 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் திரிகிரஹி யோகம்.. இனி பண மழை கொட்டுமாம்..அதிர்ஷ்டம் யாருக்கு? Manithan

புத்திகூர்மையுடன் பிறப்பெடுத்த ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இருக்கான்னு பாருங்க Manithan
