எதிர்வரும் தேர்தல் குறித்து தனது நிலைப்பாட்டை வெளியிட்ட குருசாமி
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என முன்னாள் மேல்மாகாண சபை உறுப்பினர் கே.டி.குருசாமி தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (10.10.2024) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
“நான் மேல் மாகாண சபை உறுப்பினராக இருந்த போது, நேர்மையாக மக்கள் பணி ஆற்றியுள்ளேன் என்பதை கூறிக்கொள்ள விரும்புகின்றேன். அதன்போது, எனக்கு ஒதுக்கப்பட்ட நிதிகளையும் முறைப்படி பயன்படுத்தியுள்ளேன்.
கடந்த காலங்களில் மக்களின் ஆணையைப் பெற்ற அரசியல்வாதிகள், தங்களது கடமைகளை நேர்மையாக செய்தார்களா என்பது சந்தேகமே. அதனால் தான் இந்த ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது” என்றார்.
மேலும் தெரிவிக்கையில்,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
மீனா மறைக்கும் விஷயம் என்ன, ஓபனாக கூறிய முத்து, கடும் ஷாக்கில் ரோஹினி.. சிறகடிக்க ஆசை எபிசோட் Cineulagam
பிரித்தானியாவில் பிறந்த பிள்ளைகளும் நாடுகடத்தப்படலாம்: அடிமடியில் கை வைக்கும் உள்துறைச் செயலரின் திட்டம் News Lankasri