கோட்டாபயவுக்கு எதிரான வழக்குகள் மீள ஆரம்பிக்கப்பட வேண்டும்: ஜே.வி.பி எச்சரிக்கை
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாடு திரும்பியவுடன் அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகள் விரைவில் மீள ஆரம்பிக்கப்பட வேண்டும் என ஜனதா விமுக்தி பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திபொன்றில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
கோட்டாபய ராஜபக்ச இலங்கை பொதுமக்களை போல நாட்டிற்கு வர உரிமை உண்டு ஏனெனின் அவர் இலங்கை பிரஜை எனவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.
கோட்டாபயவுக்கு எதிரான வழக்குகள்
"எனினும், அவர் இனி நாட்டின் ஜனாதிபதி இல்லை. அவர் மீதான வழக்குகள் விசாரிக்கப்பட வேண்டும், அவருக்கு எதிராக சட்டம் செயல்படுத்தப்பட வேண்டும் எனவும் இதன்போது வலியுத்தியுள்ளார்.
மேலும், அமைதியான போராட்டக்காரர்களை அடக்கி வேட்டையாடும் கோழைத்தனமான நடவடிக்கைகளை அரசாங்கம் நிறுத்திக்கொள்ள வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹேரத் தெரிவித்துள்ளார்.
தாமதமாகும் பொருளாதார நெருக்கடிக்கான தீர்வு
"மக்கள் எதிர்கொள்ளும் எரிபொருள், எரிவாயு, உரம் மற்றும் மருந்துப் பற்றாக்குறையைத் தீர்ப்பதன் மூலம் மட்டுமே போராட்டத்தை நிறுத்த முடியும்.
அடக்குமுறை அல்லது மிரட்டல் மூலம் இதை ஒருபோதும் நிறுத்த முடியாது. அடக்குமுறைக்கு எதிராக மேலும் மேலும் மக்கள் முன்வருவார்கள், அது அரசியல் நெருக்கடியை மோசமாக்கும்.
அதன் காரணமாக பொருளாதார நெருக்கடிக்கான தீர்வுகளும் தாமதமாகும்," என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
விடுதலை புலிகளிடமிருந்து நாட்டை மீட்டெடுத்த நான் ஏன் தப்பித்து ஓட வேண்டும்! மகிந்த ஆவேசம் |