ஜே.வி.பி.யினால் கொலை செய்யப்பட்டவர்கள் பட்டியல் ஒன்றை நாடாளுமன்றில் சமர்ப்பித்த சஜித் தரப்பு
ஆளும் தேசிய மக்கள் சக்தியின் பிரதான கூட்டணி கட்சியான ஜே.வி.பி கட்சியினால் கடந்த காலங்களில் படுகொலை செய்யப்பட்டதாக கூறப்படும் நபர்களின் பெயர் பட்டியல் ஒன்று நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியினால் இந்த அறிக்கை சமர்ப்பிக்கபபட்டுள்ளது.
பெயர் பட்டியல்
ஜேவிபியினால் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் சுமார் 1300 பேரின் பெயர் பட்டியல் இவ்வாறு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோகிணி குமாரி கவிரத்ன, இந்த பட்டியலை சமர்ப்பித்துள்ளார்.
மேலும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு (LTTE) முன்னதாகவே ஜே.வி.பி சிறுவர் போராளிகளைப் பயன்படுத்தியதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
சபாநாயகரிடம் கேள்வி
கந்தளாய் பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுவனை பயன்படுத்தி, ஐக்கிய தேசியக் கட்சியின் 70 வயது பெண்ணை கொலை செய்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல, கம்யூனிஸ்ட் கட்சி தலைவரான ஜோர்ஜ் ரத்நாயக்கவும் ஒரு சிறுவன் மூலம் கொல்லப்பட்டார் என தெரிவித்துள்ளார்.
மேலும், சாகரிகா கோமஸ் கொலை சம்பவத்தையும் அவர் பாராளுமன்றத்தில் நினைவூட்டினார். இத்தகைய கொலைகளுக்கு நீதியில்லையா? என்று அவர் சபாநாயகரிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
குணசேகரனின் தந்தை ஆதிமுத்து இவர்தான்.. போட்டோவுடன் வந்த கரிகாலன்.. எதிர்நீச்சல் சீரியலின் புரோமோ வீடியோ Cineulagam
சதய நட்சத்திரத்தில் சுக்கிரன் பெயர்ச்சி... இந்த ராசிகளுக்கு கெட்ட காலம் ஆரம்பமாகுது ஜாக்கிரதை! Manithan
ஆதிமுத்து யார் என்ற பரபரப்பிற்கு இடையில் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலின் படப்பிடிப்பு தள வீடியோ... என்ன விஷயம் பாருங்க Cineulagam