பிரசன்ன ரணதுங்கவின் முக்கிய வழக்கொன்றின் தீர்ப்புக்கான திகதி அறிவிப்பு
முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கு எதிரான முக்கிய வழக்கொன்றின் தீர்ப்பு எதிர்வரும் ஆறாம் திகதி வழங்கப்படவுள்ளது.
முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, மேல் மாகாண சபையின் முதலமைச்சராக இருந்த காலப்பகுதியில் வர்த்தகர் ஒருவரை அச்சுறுத்தி கப்பம் பெற முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
குற்றச் சம்பவம்
கடந்த 2015 ஏப்ரல் 06- ஜூன்02ம் திகதி வரையான காலப்பகுதிக்குள் வர்த்தகர் ஒருவரை தொலைபேசியில் அச்சுறுத்தி அவரிடமிருந்து 640 லட்சம் ரூபாய் பணத்தை பிரசன்ன ரணதுங்க கப்பமாக கோரியிருந்தார்.

அது தொடர்பான ஒலிப்பதிவும் வௌியிடப்பட்டிருந்தது. சம்பவத்தின் அடிப்படையில் கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் உருவாக்கப்பட்ட நிதிமோசடிப் பிரிவு பொலிஸார் பிரசன்ன ரணதுங்க மற்றும் அவரது மனைவிக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தனர்.
வழக்கின் விசாரணைகள் முடிவடைந்துள்ள நிலையில் எதிர்வரும் ஜூன் மாதம் 06ம் திகதி குறித்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.