முல்லைத்தீவு ஊடகவியலாளர் தாக்கப்பட்ட விவகாரம்! மன்னிப்புக்கோரிய இராணுவ சிப்பாய்கள்

Investigation Army Sri Lanka journalist Mullaitivu
By Mohan Dec 03, 2021 05:50 AM GMT
Report

முள்ளிவாய்க்கால் பகுதியில் ஊடகவியலாளர் மீதான தாக்குதலில் கைதாகிய இராணுவ சிப்பாய் மூவரும், குற்றத்தை ஒப்புகொண்டு மன்னிப்பு கோரியுள்ள நிலையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரி முன்னிலையில் குற்றத்தை ஒப்புகொண்டு மன்னிப்பு கோரியுள்ள நிலையிலேயே கடந்த 30 ஆம் திகதி விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பில் தெரியவருவதாவது,

இராணுவத்தினர் என் மீது தாக்குதலை மேற்கொள்ளவில்லை என்பது உண்மைக்கு புறம்பானது, மோட்டர்சைக்கிளில் இருந்தவாரே முள்ளிவாய்கால் பெயர் பலகையை ஒளிப்படம் எடுத்த என்னை நோக்கி வந்த இராணுவ சிப்பாய் ஒருவர் ஒயா கௌத என்று கேட்டார்.

நான் பதிலளிக்கும் முன்பே என்மீது தாக்குதலை தொடுத்தார்.

அச்சந்தர்ப்பதில் சுதாகரித்து கொண்ட நான் குறித்த சிப்பாயின் தாக்குதலில் இருந்து தப்பிக்க ஒளிபதிவு செயதவாரே மோட்டர் சைக்கிளில் இருந்து பின்பக்கமாக இறங்கி பின்நகர்ந்தேன்.

குறித்த சிப்பாய் என்னை நோக்கி வந்தவாரே தொலைபேசி அழைப்பு ஒன்றை ஏற்படுத்தி உரையாடிக்கொண்டு வந்தார்.

பின்னர் அவர் என்மீது தாக்குதலை தொடுத்த சந்தர்பத்தில் மேலும் இரண்டு சீருடை அணியாத இரு இராணுவ சிப்பாய்களும் சேர்ந்து, பச்சைமட்டை மற்றும் கைகளாலும் காலினாலும் தாக்குதலை தொடுத்தனர்.

என்மீது ஆரம்பத்தில் தாக்குதல் தொடுத்த முதலாவது இராணுவ சிப்பாய் தான் என்மீது தாக்கிய காட்சிகளின் ஆதரத்தை அழிக்கும் நோக்கத்தில் எனது ஒளிப்பதிவு கருவியை பறிப்பதை நோக்கமாக கொண்டே உதவிகளுக்கு இரணடு இராணுவ சிப்பாய்யை அழைத்து மீண்டும் என்மீது தாக்குதலை தொடுத்தார்.

(சம்பவம் எனது மோட்டர்சைக்கில் நின்ற இடத்தில் இருந்து சுமார் 30 மீற்றர் துரத்தில் நடைபெற்றது.)

கண்முடித்தனமாக என்மீது இராணுவத்தினர் தாக்குதலை மேற்கொண்ட போதும் எனது ஒளிப்பதிவு கருவியை நான் கைவிட மறுத்து பிடிவாதமாக நின்றதால்.

என் மீதான மல்லுக்கட்டலும் தாக்குலும், 20 நிமிடங்கள் தொடர்ந்தது இதன் விளைவாக அருகில் இருந்த முற்கம்பிவேலிக்குள் என்னை இராணுவ சிப்பாய்கள் சிக்கவைத்தனர்.

முற்கம்பியில் தாக்கியும் கீறியும் குத்தியதால் அதிகளவு இரத்தபெருக்கு ஏற்பட்டு பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்றேன்.

குறித்த சம்பவம் தொடர்பில் நேற்று முன்தினம் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தால் இடம்பெற்ற விசாரணையில், சந்தேக நபர்கள் குற்றத்தை ஒப்புகொண்டு மன்னிப்பு கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 


மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்!


மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
16ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US