குமணன் மீது நீண்டநேர விசாரணை.. தலைதூக்கும் TIDயின் அடக்குமுறை

CID - Sri Lanka Police Sri Lankan Tamils Journalists In Sri Lanka World
By Sajithra Aug 18, 2025 12:31 PM GMT
Report

பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் (TID) இன்று கிட்டத்தட்ட ஏழு மணி நேரம் விசாரணை செய்யப்பட்டதாக ஊடகவியலாளர் கணபதிப்பிள்ளை குமணன் தெரிவித்துள்ளார். 

ஆங்கில ஊடகம் ஒன்றில் வெளியான செய்தியின் அடிப்படையில், பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரின் இவ்வாறான செயற்பாடுகள் நாட்டில் பத்திரிகை சுதந்திரம் குறித்து சர்வதேச அளவில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

விசாரணை தொடர்பில் ஊடகவியலாளர் குமணன் தெரிவிக்கையில், "விசாரணை 6 மணி நேரம் 45 நிமிடங்கள் நீடித்தது, மேலும் எனது பத்திரிகை மற்றும் புகைப்பட வேலை, சமூக ஊடக நடவடிக்கைகள், நிதி பதிவுகள், தொலைபேசி அழைப்புகள் மற்றும் வெளிநாட்டு வருகைகள் ஆகியவை மீது குறித்த விசாரணைகள் இடம்பெற்றன” என குறிப்பிட்டுள்ளார். 

கடத்தல்காரர்களின் கோடிக்கணக்கான சொத்துக்களை பறிமுதல் செய்ய தயாராகும் அரசாங்கம்

கடத்தல்காரர்களின் கோடிக்கணக்கான சொத்துக்களை பறிமுதல் செய்ய தயாராகும் அரசாங்கம்

தொடர் அச்சுறுத்தல்கள்..

அதேவேளை, பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் தொடர் அழுத்தம் மற்றும் அடக்குமறை இருந்தபோதிலும் உண்மை அடிப்படையிலான அறிக்கையிடலைத் தொடருவேன் எனவும் அவர் கூறியதாக குறித்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. 

குமணன் மீது நீண்டநேர விசாரணை.. தலைதூக்கும் TIDயின் அடக்குமுறை | Journalist Kumanan Tid Inquiry

இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் அளித்த முறைப்பாட்டைத் தொடர்ந்து ஊடகவியலாளர் குமணனுக்கு எதிராக விசாரணை அழைப்பு விடுக்கப்பட்டது.

இந்த நடவடிக்கை ஊடகவியலாளர்களை, குறிப்பாக உள்நாட்டுப் போர் மற்றும் அதன் பின்விளைவுகளுடன் தொடர்புடைய முக்கியமான பிரச்சினைகள் குறித்து செய்தி வெளியிடுபவர்களை துன்புறுத்தும் பரந்த வடிவத்தின் ஒரு பகுதியாகும் என்று ஊடக உரிமைகள் அமைப்புக்கள் கண்டனம் வெளியிட்டுள்ளன. 

இந்நிலையில், மனித உரிமைகள் மற்றும் பத்திரிகை சுதந்திர அமைப்புகளின் கூட்டணி, பத்திரிகையாளர்களைப் பாதுகாக்கும் குழு (CPJ), எல்லைகளற்ற நிருபர்கள் (RSF), சர்வதேச பத்திரிகை நிறுவனம் (IPI), FORUM-ASIA, சர்வதேச சட்ட வல்லுநர்கள் ஆணையம் (ICJ) ஆகிய அமைப்புக்கள் இணைந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன. 

கதவடைப்பில் வெற்றி கண்டதா தமிழரசுக் கட்சி.. அரசாங்கத்தின் நிலைப்பாடு

கதவடைப்பில் வெற்றி கண்டதா தமிழரசுக் கட்சி.. அரசாங்கத்தின் நிலைப்பாடு

உரிமை மீறல்கள் 

குறித்த அறிக்கையில், குமணனுக்கு எதிரான பழிவாங்கல்களை நிறுத்தி, பயங்கரவாத விசாரணைப் பிரிவின் அழைப்பாணையை திரும்பப் பெறுமாறு இலங்கையை வலியுறுத்தப்பட்டுள்ளது. 

குமணன் மீது நீண்டநேர விசாரணை.. தலைதூக்கும் TIDயின் அடக்குமுறை | Journalist Kumanan Tid Inquiry

பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் (PTA) போன்ற பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்கள் தொடர்ந்து தவறாகப் பயன்படுத்தப்படுவதைக் காரணம் காட்டி, இலங்கை மீதான மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் (OHCHR) கண்காணிப்பு ஆணையை புதுப்பிக்குமாறு குறித்த அமைப்புக்கள் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையத்திடம் (UNHRC) கோரியுள்ளன. 

"சர்வதேச சமூகம் இலங்கையில் நடந்து வரும் அனைத்து மீறல்கள் மற்றும் பழிவாங்கும் நடவடிக்கைகளையும், குறிப்பாக போர் தொடர்பான குற்றங்கள் குறித்து பேசுபவர்களை அடக்குவதற்கு பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தொடர்ந்து தவறாகப் பயன்படுத்தப்படுவதையும் உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டும்" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்தப் பின்னணியில், இந்த ஆண்டு இறுதியில் ஜெனீவாவில் நடைபெறும் UNHRC இன் 60ஆவது அமர்வில் இலங்கையின் மனித உரிமைகள் பதிவு மறுஆய்வுக்கு உட்படுத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இன்று கதவடைப்பு! யாழில் சில பகுதிகள் முடக்கம் - பல பகுதிகளில் இயல்பு நிலை

இன்று கதவடைப்பு! யாழில் சில பகுதிகள் முடக்கம் - பல பகுதிகளில் இயல்பு நிலை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW  
மரண அறிவித்தல்

கைதடி, New York, Rochester, United States

10 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US